என்னைப் பற்றி

எனது படம்
கனவுகளை விட நிஜங்களில் வாழ ஆசை...

சனி, 17 பிப்ரவரி, 2018

உலகம் (தமிழ் தேசம்) மீட்போம்....

தமிழன் எல்லோரும்
❤கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே, வாளொடு  
முன் தோன்றி மூத்தகுடி❤ என்று
பெருமை பட பேசுகிறோம்...

இதன் முழு விளக்கம்

புலவர்.ஐயனாரிதனார்
எழுதிய
தமிழ் புறப்பொருள் இலக்கண நூலான 
புறப்பொருள்  வெண்பா மாலை - கரந்தை படலம் 351 குடி நிலையில் ,

மூத்த குடிமக்கள் பற்றிய குறிப்பு...

செய்யுள்:

பொய் அகல, நாளும் புகழ் விளைத்தல் என் வியப்பாம் ?
வையகம் போர்த்த, வியங்கு ஒலி நீர்  - கையகலக்
கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே, வாளொடு  
முன் தோன்றி மூத்தகுடி.

பொருள்:

உலகம் முழுதும்  தண்ணீரில் மூழ்கி ( வையம் போர்த்த வியங்கு ஒலி நீர்)
கொஞ்சம் கொஞ்சமாக நீர் விலக ( கையகலக்)
முதலில் மலை தெரிய ( கல் தோன்றி ) பின்
மண் தெரியும் காலத்திற்கு முன்பே (மண் தோன்றா)
புத்தியோடு தப்பித்த (வாளொடு )
முன் தோன்றி மூத்த குடி( மூத்த மனிதன்- தமிழன்)
உலகில் கெட்டவை அகல ( பொய் அகல)
தினமும் புதியவற்றை கண்டறிவதில் ( நாளும் புகழ் விளைத்தல் )
என்ன வியப்பு இருக்கிறது (என் வியப்பாம்)

உலகில் பிரளயம் ஏற்பட்ட போது தப்பித்த தமிழர்களே அதாவது
பிரளயத்திற்கு முன் தோன்றி வாழ்ந்த உலகின் மூத்த குடி என்பதையே
இப்பாடலில் சொல்லியிருக்கிறார்கள்.

தமிழ்,தமிழன் என்று பெருமை பேசிக் கொண்டால் மட்டும் போதாது....

உலகில் வேற்று மொழி, வேற்று மதம், வேற்று தேசம் என்று ஒதுக்கி வைத்து பேசாமல், 
அழிந்து போன மனித வரலாற்றை ஆய்விற்கு உட்படுத்த வேண்டும்...

விவிலியத்தில் பிரளயத்தின் வரலாற்றையும், மனித வளர்ச்சியை திருகுரானிலும்,நம் தேச வரலாற்றை பகவத்கீதையிலும் கண்டறிந்தால்
தான் தமிழர்கள் வரலாற்றை தொகுக்க முடியும்.

தமிழர் பெருமை பேசுவதற்காக
சொல்லபட்டதல்ல
மேற்கண்டவை...
உலகில் இருக்கும்
மனித இனம் - ஒரே
உறவுகள் என்பதை
சொல்வதற்கே...

தேசம்,இனம்,மதம்,ஜாதி ஒழித்து
மனிதம் கொண்ட மனிதர்களாய்
மாறுவோம்...
வேற்று கிரகவாசிகள்
வந்து நம்மை
தாக்குவதற்க்குள்....

கருத்துகள் இல்லை: