நீ
முன்பெல்லாம்
என்
வேலை நேரங்களில் கூட
அலைபேசி சூடேறும் வரை பேசி
என்னையும் சூடேற்றுவாய்...
இன்று
உன்னை
எத்தனை முறை
அழைத்தாலும்
அத்தனையும்
தவறிய அழைப்புகளாய்
உன்னுள் தேங்கி கிடக்கிறது
பெற்ற அழைப்புகள்
அத்தனையும் மறந்து ...
என்னை
நீ
தவிக்கவிடவில்லை...
தவிர்க்கவே விரும்புகிறாய்...
இதை
நான்
உணராமல் இல்லை...
நான் பொறுமையாய்
நீ என்னை
நிராகரித்த பின்னும்
தொடர முயற்சிக்கிறேன்...
நீ
பொறுமை இழந்து
உன் தோழி மூலம்
"அவள் வெளியே சென்றிருக்கிறாள்
அப்புறம் கூப்பிடுங்கள்"என்று
சொல்ல வைக்கிறாய்
கடந்த சில மாதங்களாக
கடந்து போனவை மறந்து.....
உன்னிடம்
ஒன்று மட்டும்
கேட்க வேண்டும்?....
.......................
...............
..........
என்ன
கேட்கலாம்?!....
..................
........
எனக்கு
தெரியவில்லையடி?!...
............
........