என்னைப் பற்றி

எனது படம்
கனவுகளை விட நிஜங்களில் வாழ ஆசை...

புதன், 29 செப்டம்பர், 2010

உன்னால்....

அழகான அவஸ்தைகள்...
எனக்கே
என்னை
மீட்டு கொடுத்தாய்....
நானும் கூட
தடுமாறுகிறேன்...
கொஞ்சம் வெட்கமாய்
வெட்கத்தில்...
அத்தனையும்
அழகாய் ஏன்?...

வெட்ட வெளியில்
நான் நடக்கிறேன்
இங்கும் அங்குமாய்...
இந்த வாடைகாற்று
என் மேல் உரசுகிறது ...
உனக்கும் அனுப்பி வைக்கிறேன்...
நான் சுகபடுவதை விட
நீ சுகப்பட
நான் ஏன் ஏங்குகிறேன்?!...

நானாய் வாழ
ஆசை கொள்கிறேன்...
நீ மட்டும் ஏன்?
ரெம்ப காதலாய்...
ஒன்று சொல்லவா?...
ஆம்
எனக்கும் வெட்கம்
உன்னால்...

இந்த இரவெல்லாம் நீ...
இனி  வரும் இரவெல்லாம் நீ...
நீயே சொல்
எது சுகம் எனக்கு?!...

மெல்லியதாய் நாட்கள் ...
மெலிதாய்
வெகுவாய்...
ரிதமாய்...
ஏன்?
பல நாட்களாய்...
இல்லை
இல்லை...
இந்த சில நொடிகளில்
ஏன்?
மெல்லிசையாய்....

கருத்துகள் இல்லை: