என்னைப் பற்றி

எனது படம்
கனவுகளை விட நிஜங்களில் வாழ ஆசை...

புதன், 29 செப்டம்பர், 2010

காதல்

என்
கடந்த  கால
கால்தடங்களை கண்டுபிடித்து
பின் தொடர்ந்தேன் ..
உன்னில்
போய் முடிவதேனடி...

காதல்
எதையும்
செய்யும் என்று கேட்டேன்?...
நீ
அதற்கும் மேலே
அத்தனையும்
செய்தாய் ஏனடி?......

மவுனமாய்
நகர்கிறேன்...
என்னோடு பேசுபவர்களிடம்
பதில் சொல்லாமல் உளறியபடி...
நானாய் வெட்கம் கொள்கிறேன்...
நீ அருகிலும் தொலைவிலும்
இல்லாத பொழுதுகளில் கூட...
சுகம்...
சுகமாய்...
உன் சுகம்
என்ன என்று தெரியாமலே!...

எனக்கு காதல் பிடிக்கும்...
எனக்குள் காதல் வருமா?...
என்னையே
கேட்டு கொண்டிருந்தேன்
இத்தனை நாள்...
ஏன் உன்னிடம்
இத்தனை நாள் கேட்கவில்லை?....





கருத்துகள் இல்லை: