என்னைப் பற்றி

எனது படம்
கனவுகளை விட நிஜங்களில் வாழ ஆசை...

திங்கள், 6 செப்டம்பர், 2010

என்ன செய்வது?...

வாழ்க்கை இனிமையானது....
நாம்
நினைப்பதெல்லாம்
நடக்கும் போது மட்டும்.. ...
வாழ்க்கை கசப்பானது...
நாம்
நினைப்பது எதுவும் நடக்காத போது....
வாழ்க்கை
நாம்  வாழ வேண்டும் என்ற போதெல்லாம்
தோற்கடிக்கப்படுகிறோம் ....
நாம் எடுத்த முடிவுகள் தான்
தோல்விகளுக்கு காரணம் என்று
விதி வழி சென்றாலும்
அந்த முடிவும் கூட
பல நேரங்கள் 
தவறாய் போகிறது ...
வாழ்க்கை 
என்ன வென்றே புரியவில்லை...
விதியா?...
விதியை வெல்ல முடியும் என்று
சொல்லும் மதியா?...
நாம்
வாழ்க்கையை
வெறுக்கும் போது தான் தெரிகிறது...
வாழ்க்கை என்று
இங்கு ஒன்றும் இல்லை...
இருப்பதை வாழ்ந்து விட்டு
போய் தான் ஆகவேண்டும்...
இதை விதி என்பதா?...
வேறு வழி இல்லை என்பதா?....
என்ன  செய்வது?...

கருத்துகள் இல்லை: