என்னைப் பற்றி

எனது படம்
கனவுகளை விட நிஜங்களில் வாழ ஆசை...

புதன், 29 செப்டம்பர், 2010

நான் யார்?..

நான் யார் என்றேன்...
நீயா என்றேன்?...
நீ தானா என்றேன்...
நீ தான் என்றேன்...
இத்தனை
அருகில் இருந்தது
நீயா?...
என்னுள்
இடைவெளி தந்த
காதல் நீயா?...
 
வாழ்க்கை புதிராய்
இருக்கிறதென்றார்கள்...
அப்படியா என்றேன்..
இன்று
புதிராய் இருக்கிறது
நானே நானா?...

வானம் ஏதோ
தூரமாய்
இருக்கிறதென்றார்கள்..
நான்
இப்போது வானத்தில் பறக்கிறேன்...
இது ஒன்றும்
தூரமாய் தெரிய வில்லை...
ஆஹா..
நட்சத்திரங்கள்
ஏதோ நினைவு படுத்துகிறது...
ஆமாம்
நீ யார்?...

.


கருத்துகள் இல்லை: