என்னைப் பற்றி

எனது படம்
கனவுகளை விட நிஜங்களில் வாழ ஆசை...

வியாழன், 30 செப்டம்பர், 2010

மடையர்களா!?..

இந்திய வரலாறு
நிறைய விசயங்கள் கொண்டது...
இந்தியா, ஸ்ரீலங்கா, பாக்கிஸ்தான்
ஒன்றாய்  இருந்தது என்பதை
மறுக்க முடியாது......

மக்கள் எப்போதும்
ஒற்றுமையாய் இருந்ததில்லை...
இங்கு மட்டும் இல்லை
உலகம் முழுதும்...

குறுநில மன்னர்களால்
அங்கங்கு கூட்டம்  கூட்டமாய்
மனிதர்கள் வாழ்ந்தவர்கள்...
பத்து தலைமுறைக்கு முன்னால்
எந்த மதமும் இல்லை
ஜாதிகளும் இல்லை...

நம் ஒற்றுமை குறைவை
காரணமாய் வைத்து
ஆங்கிலேயர்கள்
நம் நாட்டின்
இயற்கை வளங்களை
கொள்ளை அடித்து
தன் தேசத்தை(லண்டன்)
சொர்க்கபுரியாய் மாற்றி கொண்டார்கள்...

நாம் ஒன்று பட
எத்தனை ஆண்டுகள் ஆனது?..
செல்லும் போது
பிரிவினை செய்து விட்டு
வினை விதைத்தே சென்றார்கள்...

நாம் அனைவரும்
ஏதோ ஒரு விதத்தில்
உடன் பிறந்த சகோதரர்கள்...
இது வரலாற்று உண்மை...
ஆனாலும் நாம் அப்படியா?...
இன்னும்
நாம் வெறி கொண்டு
எதை சாதிக்கிறோமோ இல்லையோ...
நம்மையே அழித்து கொல்வோம்...

முஸ்லிம் இனவுணர்வுகளை கொண்டு
காஷ்மீர் பிரதேசத்தால்
இந்தியாவை அழிப்பதாய் சொல்லியே
பாக்கிஸ்தான் அழிகிறது...
தீவிரவாதிகளிடம் இருந்து
இன்னொரு சுதந்திரம் வாங்க
பாகிஸ்தானியர்கள் 
போராடித்தான் ஆக வேண்டும்...

தமிழ் உணர்வுகளை கொண்டே
இலங்கை அழிகிறது....
சிங்களனும், தமிழனும்
அடித்துகொண்டால்
வேற்று தேசத்தின்
அடிமைகளாய் மாறி
இன்னொரு சுதந்திரத்திற்காய்
அலையத்தான் போகிறார்கள்?...


இன்று
நாம் இந்தியர்களோ இல்லையோ
நாம் சகோதரர்கள்...
பிரிந்த பின்
நமக்கு நாமே
சண்டை இட்டு கொள்வதற்கா
சுதந்திரம் பெற்றோம்?...

சுதந்திரத்தை
தந்திரமாய் தந்து
நம்மை நாமே
கொன்று கொல்ல
செய்துவிட்டார்கள்...

வரலாறு என்பது
பொழுது போக்கிற்காய் படிப்பதல்ல...
நம்மை
திருத்தி கொள்ளதான் என்பதை
படிக்க மறுக்கிறார்கள்...

நம் ஒற்றுமைக்கெல்லாம்
வானத்தில் இருந்தெல்லாம்
கடவுள் குதிக்க முடியாது
மடையர்களா!...

கருத்துகள் இல்லை: