என்னைப் பற்றி

எனது படம்
கனவுகளை விட நிஜங்களில் வாழ ஆசை...

வியாழன், 30 செப்டம்பர், 2010

மரணத்திற்கு பின்னால்...

மரணத்திற்கு பின்னால்...
நாம் யார்?...
எங்கே போகிறோம்?...
சொர்க்கமா?
நரகமா?..
சென்று வந்தவர்கள் யாராவது
இருந்தால்
தெளிவு படுத்தி கொள்ளலாம்...
அப்படி யாரும் இல்லை...

உயிர்,ஆத்மா...
அப்படி என்றால் என்ன?...
சரியானதை சொல்ல
எந்த மனிதனும் பிறக்க வில்லை...
பிறக்க போவதும் இல்லை...

எத்தனையோ நம்பிக்கைகள்...
எத்தனையோ மதங்கள்...
எத்தனையோ கடவுள்கள்... 
நாம் படைத்தாலும்...
"உயிர் போகும்"
"உடல் அழிந்து போகும்...


ஆத்மா அழியாது"
"மீண்டும்
வேறு உடலில்
ஆத்மாஜெனிக்கும்"...என்கிறோம்...
உலகில் முதன் முதலில்
எத்தனை மனித உயிர்கள் இருந்தன?...

உலகின் அன்றைய
மக்கள் தொகை என்ன?..
உலகின் இப்போதைய
மக்கள் தொகை என்ன?...
எத்தனை ஆத்மாக்கள் இருந்தன?..
இத்தனை ஆத்மாகளும்
எங்கிருந்து வருகின்றன?..
எங்கே போகின்றன?....
மனிதர்கள் குட்டி போடுகிறோம்?...
ஆத்மாக்களும் குட்டி போடுகின்றனவா?..

கேள்வி சரியா?...
பதில் யாருக்கும் தெரியவில்லையா?..
கடவுள்  நம்பிக்கையை
அழிக்க கேட்கப்படும்
கேள்வி இல்லை...
நம் மூட நம்பிக்கையை
ஒழிக்கும் கேள்வி?!...

எத்தனை நாள் தான்
நம்மையே
நாம்
ஏமாற்றி
கொள்ள போகிறோமோ?...

இருக்கட்டும்...
எல்லாவற்றிற்கும்
நாம் சொல்லும்
அதே பதில்
"நம்பிக்கை தான் 
வாழ்க்கை "என்று
இதற்கும் சொல்லி
தப்பித்து கொள்வோம்
மரணம் வரை...

கருத்துகள் இல்லை: