என்னைப் பற்றி

எனது படம்
கனவுகளை விட நிஜங்களில் வாழ ஆசை...

புதன், 22 செப்டம்பர், 2010

உண்மையோ ?..

ஆணின் கற்பு
பெரும்பாலும்
காதலில் காப்பாற்றபடுகிறது...
ஏனோ
இந்த பெண்கள் தான்
காதலில் மட்டும் இல்லை
நட்பில் கூட
கற்பை தொலைக்கிறார்கள்...

பாவம்
பெண்களை விட
இந்த ஆண்கள் தான்
கற்பை பற்றி அதிகம்
பேசுகிறார்கள்...
அலட்டி கொள்கிறார்கள்...

எந்த ஆணும்
தன்
தாய்,தங்கை
தன்னுடன் இருக்கும்
பெண்ணினம்
கெட்டு போவதை
விரும்புவதில்லை...
கெட்டு போனவர்கள் என்று
யாரும் சொல்லி கேட்பதை
சகித்து கொள்வதுமில்லை...

ஏமாற்றி போன காதலியை
தவறாய் பேச கூடா
எந்த காதலனும்
அனுமதிப்பதில்லை...

ஆம்
காதலால்
ஒழுக்கம் கெட்டவர்கள்
ஆண்களில் குறைவு...








கருத்துகள் இல்லை: