என்னைப் பற்றி

எனது படம்
கனவுகளை விட நிஜங்களில் வாழ ஆசை...

செவ்வாய், 14 செப்டம்பர், 2010

உன்னை காதலித்தவன் மேல் ஆணை...

உன்னோடு
சிரித்து பேசும் போதெல்லாம்
உணராத காதலை...
உன்னை
திட்டும் போது மட்டும்
உணர்கிறாய்...

உனக்கே தெரியாமல்
நான்
உன்னை விட்டு
விலக போகிறேன்...
அந்த நாள்
நெருங்கி விட்டது கண்மணி
மன்னித்து விடு....

உன்னை
விட்டு பிரிய போகும்
நான் வருந்துவதெல்லாம் ஒன்று தான்...
என்னை விட உன்னை யாரும்
உலகில்
இத்தனை அழகாய்
காதலிக்க போவதுமில்லை...
இத்தனை அக்கறையாய்
கவனிக்க போவதுமில்லை...

உன்னோடு யாராலும்
பயணிக்க முடியாதடி...
நீ அத்தனை
கொடுமையானவள்...
உனக்கு
தெரிந்திருக்க முடியாது
உன்னால்
நான் தொலைத்து அழுத நாட்களை...

உனக்கு தெரியுமா?..
நீ இறக்கும் போது
உன் அருகில் யாரும்
இருக்க போவதில்லையடி...

உன் இறப்பு
யாரையும் அழவைக்காதடி...
காரணம்..
உன்னால் அழுதவர்கள் 
அதிகம் என்பதால்......
இது
உன்னை காதலித்து
இறந்து போன
உன் காதலன் மேல் ஆணை...
இது சாபம் அல்ல...
உண்மை...




கருத்துகள் இல்லை: