என்னைப் பற்றி

எனது படம்
கனவுகளை விட நிஜங்களில் வாழ ஆசை...

திங்கள், 13 செப்டம்பர், 2010

இந்த சமூகம் வாழ போகிறது?...

அரசு
வேலைவாய்ப்பு அலுவலகத்தில்
நமக்கு முன் படித்த
லட்சகணக்கானவர்கள் 
பதிந்து வைத்து
வேலைக்காக காத்திருந்தாலும்
படித்து முடித்தவுடன்
நமக்கு மட்டும் வேலை வேண்டும் என்று
குறுக்கு வழி தேடும் நாம் ......

சக பணியாளர்களுக்கு
பணி நிரந்தரம் கிடைக்காமல் போக
தவம் இருப்பதும்...
பக்கத்தில் இருப்பவன்
முன்னேறாமல் இருக்க
முடிந்தவரை முயல்வதுமாய்
நாம்...

ஒரு இரண்டு ரூபாய்
கொடுத்து
வாங்கிய பத்திரிக்கையை
அருகில் பயணம் செய்யும்
பயணி படிக்கக்கூடாது என்று
மடக்கி மடக்கி படிக்கும்
நம் சுயநல இளயோர்களால் தானா
இந்த சமூகம் வாழ போகிறது?...




கருத்துகள் இல்லை: