என்னைப் பற்றி

எனது படம்
கனவுகளை விட நிஜங்களில் வாழ ஆசை...

புதன், 22 செப்டம்பர், 2010

நிஜங்கள்...

காதலித்து பிரிந்தவர்கள்
உண்மையை
ஒத்து கொள்வதில்லை....

தாங்கள் காதலித்து பிரிந்து
இன்னொருவருடன் வாழும் போது
துயரத்தில் இருப்பதாகவோ...

"என்னமோ விதியேன்னு 
வாழ்க்கை வாழ்கிறேன்  "என்றும்..

இரண்டு, மூன்று
குழந்தை பெற்ற பிறகும் கூட
வாழும் வாழ்க்கை
பிடிக்காதது போல்...
பேசுகிறார்கள்...

உண்மை
அதுவா?...

இருட்டறையில்
பகிர்ந்து கொள்ள படும்
காமத்திற்கு
காதலும் தெரியாது...
உடம்பும் தெரியாது...
மனசும் புரியாது...
காதலித்து பிரிந்தவர்களின்
இருட்டறைகள் ஒன்றும்
உறங்கி போவதில்லை...

காதல் செய்யும் போது
மட்டும் தான்
உடம்பு தெரியாது..
மனசு...
மனசு...
மனசு....
என்று பேசுகிறோம்...

அத்தனை பொய்களும்
பேசுவதற்கும்...
கவிதைகளுக்கும் மட்டுமே
வெளிச்சம்...

உண்மை....
இந்த உடல்
யாரோடு
வேண்டுமானாலும்
ஒட்டி கொள்ளும்
காமம் வந்து விட்டால்........

நிஜத்தை பேசினால்
நமக்கே
நம்மை பிடிக்காது....


.

கருத்துகள் இல்லை: