என்னைப் பற்றி

எனது படம்
கனவுகளை விட நிஜங்களில் வாழ ஆசை...

புதன், 22 செப்டம்பர், 2010

நரபலி...

யாரையும் அத்தனை
சாதாரணமாய்
குறை சொல்லி விட முடியாது...
அடிப்படை காரணம் இன்றி
யாரும்
எந்த தவறும் செய்வதில்லை...
எங்கோ?
ஏதோ?
ஒரு தேவை ஏற்பட்டிருக்கும்...
பற்றாக்குறை இருக்கும்...

காதலிலும் சரி
காமத்திலும் சரி...
முதல் பலி
பெண்ணாக தான் இருக்கிறார்கள்...
காதலையும்
காமத்தையும்
அடக்க முடியாதவர்களா 
அவர்கள்?...

உண்மையாக
கணவனின் தொல்லைகளில்
இருந்து தப்பிக்க நினைக்கும்
பெண்களுக்கு கூட
"கள்ளகாதல்" என்று
அசிங்கபடுத்தி
பெண்களை நரபலி
கொடுக்க தான் செய்கிறோம்?...

கருத்துகள் இல்லை: