என்னைப் பற்றி

எனது படம்
கனவுகளை விட நிஜங்களில் வாழ ஆசை...

வெள்ளி, 24 செப்டம்பர், 2010

ஆன்மிகம்...

இறைவா!
விளையாட்டுதனமாய்
உன்னை சுற்றி வந்ததும்
உன் மேல் ஏறி
ஆட்டம் போட்ட போதும்
நீ
என் மேல் அன்பும்
அக்கறையும் கொண்டிருந்தாய்...
இன்று 
நான் பத்தியம் இருந்து
உன் காதில் எதிர்பார்ப்போடு
என் குறையை
உன்னிடம் கூறியும்
நீ
அதை பெரிதாய்
எடுத்து கொள்ளவில்லை...
உன்னிடம் தான் கற்று கொண்டேன்
"எதிர்பார்ப்போடு
யாரிடமும்
அன்பை பொழிய கூடாதென்று"...

கடவுள்
நம்மைக் கேட்டுத்தான்
நமக்கு
எதையும் கொடுப்பதில்லை...
கேட்காமலேயே
நிறைய கொடுத்திருக்கார்...
கொடுத்ததற்கு
நன்றி சொல்லலாம்...

"எனக்கு
கேட்டதையெல்லாம்
தந்தால் தான் இறைவன்"என்று
வாதாட கூடாது...

கருத்துகள் இல்லை: