என்னைப் பற்றி

எனது படம்
கனவுகளை விட நிஜங்களில் வாழ ஆசை...

வியாழன், 30 செப்டம்பர், 2010

மனிதன்...

மனிதன் பயந்தவற்றை
எல்லாம்
வழிபட தொடங்கினான்...
மின்னல்,இடி,
புயல்,
வெப்பம், குளிர்,
இவைகளுக்கு
பயந்த மனிதன் ...
இயற்கையை வணங்கினான்...

இயற்கையை
வெல்ல வெல்ல
அடுத்தவற்றை வழிபடுகிறான்...
அவனவன் இஷ்டம் போல்
வழிபாட்டு முறைகள்...
முன்னோர்களையும்
அவர்களுக்கு
உதவியவர்களையும்
கடவுளாய் வழிபட்டான்...

இன்று
நம்மையும் மீறிய
ஒரு மஹா சக்தி இருப்பதை
யாரும் மறுப்பதற்கில்லை...

அந்த சக்தி யார்?...
யாருக்கும் தெரியாது?...
"தான் கண்டதே தெய்வம்" என்றால்
பரவாயில்லை...
"தான் கண்டது  மட்டுமே
கடவுள்" என்றான் ...

தான் மட்டும்
வழிபட்டு கொண்டால் மட்டும்
போதாது
தன்னை சார்ந்தவர்களும்
வழிபடவேண்டும் என்று
கட்டாய படுத்துகிறான்...

தான் வழிபடும் தெய்வம் மட்டுமே
வலிமையானது...
மற்றவை சாத்தன் என்றெல்லாம்
சொல்லுகிறான்...

மதங்களால்
மனிதர்கள் பிரிந்து
சண்டை இடுகிறார்கள்...

இன்று
மொழி,இனம்,
நிறம்,மதம் ,
நாடு கடந்து
மனிதன் சிந்திக்க ,
பயணிக்க நினைத்து
மனித நேயம் தேடி அலைகிறான்!?...

ஏன்
இந்த மனிதர்களுக்கு மட்டும்
புத்தி வர
பல நூற் றாண்டுகள் தேவைப்படுகிறது?...

ஓ...
இதை தான்
ஆறறிவு கடவுள் என்கிறார்களோ?...

கருத்துகள் இல்லை: