என்னைப் பற்றி

எனது படம்
கனவுகளை விட நிஜங்களில் வாழ ஆசை...

வெள்ளி, 24 செப்டம்பர், 2010

நல்லவர்களை மட்டும்...

நல்லவர்களை  மட்டுமே
நாம் சந்திக்க வேண்டும்...
நல்லவர்களோடு
மட்டுமே பழக வேண்டும்...

உலகில் எல்லோரும்
நல்லவர்களாகவே
இருக்க வேண்டும்....
இப்படி நல்லவர்களை
தேடி கொண்டே இருந்தால்...
நம்மால்
வாழவே முடியாது....

நல்லவர்களோடு மட்டுமே
பேசுவேன் என்றால்...
பேச தெரிந்தும்
ஒரு நாள்
நாம் ஊமையாய்
போய் விடுவோம்...

நம்மிடம்
எப்படி நடந்து கொள்கிறார்களோ?...
அதை மட்டும் பார்த்து
நமக்கு பிடித்திருந்தால்
நாம்
பழகி கொண்டு
பயணிக்க வேண்டும்....

எத்தனை வருடங்கள்
வேண்டுமானாலும்
மற்றவர்களின் குறைகள்
பேசி கொண்டு போனால்
பேசி கொண்டே இருக்கலாம்...
"குற்றம் பார்க்கின்
சுற்றம் இல்லை"....
நமக்கே சில நேரம்
நாம்
நல்லவர்களாய்
இருக்க முடியாது....

வேலை அற்ற
வீணர்களா நாம்?...











கருத்துகள் இல்லை: