என்னைப் பற்றி

எனது படம்
கனவுகளை விட நிஜங்களில் வாழ ஆசை...

திங்கள், 13 செப்டம்பர், 2010

தேசம் மீட்க...

மக்களுக்காக போராடுபவர்கள்
தீவிரவாதிகள்,
நக்சல்கள் என்றும்  சொல்வது
உலக மரபு தான்...
இன்னும் எத்தனை நாள்
தேடப்படும் குற்றவாளிகளாய்
தேசம் தாண்டி போய் 
தேசத்தை 
எப்படி
காப்பாற்ற போகீறீர்கள்?...
ஆயுதங்களால்
யாரையும் அடக்கி விட 
முடியாது என்பது  மட்டுமல்ல...
சுதந்திரத்தை கூட அடைய முடியாது...

துப்பாக்கி ஏந்தி
போராடி நம் பிள்ளைகள்
உறுப்புகள் இழந்து நிற்கும் போது
சுதந்திரம் கூட பயன்பட போவதில்லை......

அகிம்சை ஒன்றும்
அத்தனை கடினமானதில்லை...
அகிம்சையை
கோழைத்தனம் என்று யார் சொன்னது?...
போரிடுவது மட்டுமே வீரமல்ல...
வெற்றி பெறுவதே வீரம்...

ஈழ தேசத்தில்
உயிர் துறந்தவர்கள் எத்தனை பேர்?...
அதே தேசத்தில்
போர் பயிற்சிக்கு பதில்
கட்டுபாடுகள் இல்லாமல்
குழந்தை பெற்றிருந்தால்?...

பஞ்சம் வந்திருக்கும்...
பொருளாதாரம்
வீ ட்டுக்கு மட்டும் தேவை இல்லை...
நாட்டுக்கும் தேவை...
பணம்
மக்களுக்கு மட்டும் இல்லை
நம்மை ஆட்சி செய்பவனுக்கும் தேவை....
இது அகிம்சை இப்படி தான்...
ஆள்பவனை
ஹிம்சை செய்திருக்கும் ?...

நரம்பு புடைக்க பேசும்
யாராலும்
ஈழ மக்களுக்கு படையல் தான்
வைக்க முடியும்...
அவர்களை
மீண்டும் படைக்க முடியாது...

உலகம் முழுதும்
அகதிகளாய் வந்த
ஈழ தமிழ் பெண்களை
தேவிடியாளாக
விலை பேசும் கூட்டத்தை
கூறு போடவா முடியும்?...


தப்பி வந்த தமிழர்களாவது
தப்பித்து கொள்ளுங்கள்...
இனபெருக்கத்தின் மூலமாவது
நம்தேசத்தை காப்பாற்ற
கற்று கொள்ளுங்கள்......
அகிம்சையால்
இம்சை செய்யுங்கள்
தமிழ் இனம் வாழ
தேசம் மீட்க......

கருத்துகள் இல்லை: