என்னைப் பற்றி

எனது படம்
கனவுகளை விட நிஜங்களில் வாழ ஆசை...

செவ்வாய், 7 செப்டம்பர், 2010

தொலைந்து போகும் ...

உலகில்
தனித்தனி மனிதர்களாய்
ஆணும்,பெண்ணும்
வாழ்ந்தனர்..
பின்னர்
ஒவ்வொரு  நூற்றாண்டுகளாய் தான்
ஒற்றுமை...
சொந்தம்...
குடும்பம்...
இப்படி கொஞ்சம்
கொஞ்சமாய் வளர்ந்தது சமூகம்...

நாம் பின்னோக்கி செல்கிறோம்...
ஒவ்வொரு நூற்றாண்டுகளில்
ஒரு சொந்தம் இழந்து வருகிறோம்...
ஒரு நூற்றாண்டில் பெரியப்பா...
ஒரு நூற்றாண்டில் சித்தப்பா...
ஒரு நூற்றாண்டில் மாமா..
ஒரு நூற்றாண்டில் அத்தை...
இப்படி
ஒவ்வொரு ஆண்டுகளில்
ஒரு சொந்தம்
தொலைத்து கொண்டிருக்கிறோம்...
சொந்தங்கள் பெயர்
உச்சரிக்க கூட ஆட்கள் இல்லாமல் போகும்...

இன்னும்
சில ஆண்டுகளில்
தனி தனி மனிதர்களாய்
நாம் மீண்டும் ....
இடையில் வந்த
நாகரீகம் இடையிலேயே
தொலைந்து போக தான் போகிறது!!!...

கருத்துகள் இல்லை: