என்னைப் பற்றி

எனது படம்
கனவுகளை விட நிஜங்களில் வாழ ஆசை...

வியாழன், 23 செப்டம்பர், 2010

எனக்கும் மனசாட்சிக்கும் ஏற்படும் யுத்தம்...

நான்
எழுதியவற்றை  கவிதைகள்
என்று சொல்ல முடியாது...
அதற்கு தகுதியானவை கிடையாது....
என் மனதில் பட்ட
நான் பார்த்த,கேட்ட
வார்த்தைகளின் தொகுப்பு...
உரைநடை கட்டுரைகளே இவை...

நான் யாருக்காகவும்
இதனை எழுதுவதில்லை...
என்னோடு மனசாட்சியோடு
சண்டை போடுவதை
மடக்கி மடக்கி எழுதி வைக்கிறேன்...

நான் சிலநேரம்
என்னை
என்னில் இருந்தே
என்னையே
சிலநேரம் 
உமிழ்ந்து கொள்கிறேன்...
என்னை காப்பற்றி கொள்ள
உதவும்
இந்த உளறல்களை
நானே சில நேரம் ரசிக்கிறேன்...

சமூகத்தில் நான்
காண்கின்ற விசயங்களுக்கு
என்னால் தீர்வுகள்
கொடுக்க முடிவதில்லை...

என் மனம்,உடல்
கெட்டு போகாமல் இருக்கவும்...
"நமக்கு ஒவ்வாதவற்றை
நாம்  சுமப்பது
நமக்கே  பாதிப்பு தரும் "என்பதால்
என் பேனா முனை
வழியே
என் சில வலிகளை
வாந்தி எடுத்துக் கொள்கிறேன்...

நாம் பிறரை திருத்த முடியாது
அது நம் வேலையும் அல்ல...

"நம் எதிரிகளுக்கு
பாடம் புகட்ட
சரியான வழி
அவர்கள் முன்பு
நாம் சிறப்பாக
வாழ்த்து காட்டுவது தான்"...

அதற்கான வழியில்
எனக்கு உதவுவது
இந்த உரைநடை கவிதைகளும் தான்......

கருத்துகள் இல்லை: