என்னைப் பற்றி

எனது படம்
கனவுகளை விட நிஜங்களில் வாழ ஆசை...

புதன், 22 செப்டம்பர், 2010

காதல் என்றாலே திருட்டு தனம் தான்...

காதல் என்றாலே
திருட்டு தனம் தான்...
இதில் நல்ல காதல் ,
கெட்ட காதல்
என்றா இருக்கிறது?...

திருமணத்திற்கு முன்பு என்றால்
பெற்றோர்களுக்கு தெரியாமல்...

திருமணத்திற்கு பிறகு என்றால்
மணம் முடித்தவர்களுக்கு தெரியாமல்...

பெற்றோர்கள் பயப்படுவார்கள்
தன் பிள்ளை
தவறான முடிவு எடுத்து
வாழ்க்கை  இழந்து விடுமோ என்று...

திருமணம் முடித்தவர்கள் பயப்படுவார்கள்
தன் குடும்ப வாழ்கை
அழிந்து போய் விடுமோ  என்று...

காதல் என்றாலே
எதிர்பாலினரிடம்
மனதிற்காகவோ...
உடம்பிற்காகவோ  ..
பணத்தேவைக்காகவோ...
இல்லை
எதாவது
ஒரு தேவைகளை
பூர்த்தி செய்து கொள்ள
பயன்படுத்தப்படும்
இன்றைய
அன்பான ஆயுதம் தான்....

காதலை பற்றி
உயர்வாய் சொல்லி கொண்டே
இன்னும்
எத்தனை நாட்கள்
நம்மை நாமே
ஏமாற்றி கொள்ள போகிறோம்?!!!..




கருத்துகள் இல்லை: