என்னைப் பற்றி

எனது படம்
கனவுகளை விட நிஜங்களில் வாழ ஆசை...

வியாழன், 23 செப்டம்பர், 2010

கண்ணீர் துளிகள்...

உன்
அன்பான கணவன்
நான்...

உன் வாழ்க்கையில்
நீ விருப்பப்பட்ட
நிறைய ஆசைகளை
உன் தந்தை
நிராகரித்ததுண்டு...
அதையெல்லாம் கேட்டு
நான் உனக்காய்
நிறைவேற்றி வைத்தேனடி........

உனக்கு தெரிந்திருக்காது...
நானே
உணவின்றி
இருந்த நாட்கள் உண்டு...
நீ
என்னிடம் வந்த பிறகு
ஒரு நாளாவது
உண்ணாமல் இருந்திருப்பாயா?...

உன் தந்தை
உனக்கு தராத..
என் தந்தை
என் தாய்க்கு தராத...
சுதந்திரம்
நான் உனக்கு தந்ததுண்டு....
எங்கள் பரம்பரையில் 
பெண்களுக்கு சுதந்திரம் 
இதுவரை
தந்தது இல்லையடி....

உனக்கு
கை பேசி
வாங்கி கொடுத்தது
என்னையும்
நம் குழந்தைகளை தொடர்பு
கொள்ளதானடி...
நம் குடும்பகவுரவத்தை
வீசி எறிய இல்லையடி...

பெண்ணடிமை
கொடுமை பற்றி
உனக்கு தெரியுமா?...
என் தாய்க்கு
கல்வி கற்க கூட
அனுமதிக்கவில்லையடி...
உன் சுதந்திரத்தின் அருமை
உனக்கு தெரியவில்லையடி...

எனக்காய் நீ
உடன்கட்டை ஏறி
உயிர் தர வேண்டாம்...
ஒன்றை யோசித்து பார்...
நம் பிஞ்சு குழந்தைகள்
என்ன குற்றம் செய்ததடி?....

என்னால்
இதற்கு மேல்
சொல்ல நா.... கூசுதடி...
உன்மேல் இத்தனை
பிரியம் கொண்ட
எனக்கு
துரோகம் செய்ய
உன்னால் எப்படி
..................
..................???







கருத்துகள் இல்லை: