என்னைப் பற்றி

எனது படம்
கனவுகளை விட நிஜங்களில் வாழ ஆசை...

செவ்வாய், 7 செப்டம்பர், 2010

கவலைபடுவோம்?..

உடம்புக்கு ஏதாவது
ஒன்று என்றால்
அக்காவுக்காக ஓடி வரும் தங்கை இல்லை...
தம்பிக்காக ஓடி வரும் அண்ணன் இல்லை..
இன்னும் சில தினங்களில்
கணவனுக்கென்று ஓடி வரும் மனைவியும்
மனைவிக்கென்று ஓடிவரும் கணவனும் கூட
இருக்க போவதில்லை...

பணம்..
எத்தனை ஆடம்பர சொத்துகளை தருகிறது?...
பணம்...
எத்தனை சொந்தங்களை துரத்தி விட்டது?...
நாம்
என்ன பெரிதாய்
வளர்ந்து விட்டோம்?...

பணம் சேர்த்து
புதிது புதிதாய் கண்டுபிடிக்கும்
அறிவியல் சாதனங்களை
தேடி தேடி வாங்கி உபயோகிக்கிறோம் ...
மண்ணிலும் விண்ணிலும்
மென்பொருள்
குப்பைகளை கொட்டி வருகி றோம்...
அதன் பாதிப்புகள் மறந்து...
ஆனாலும்
நாம் எப்படி அழிந்து வருகிறோம்...
எப்படி அழித்து கொள்கிறோம்
நம்மையே
இந்த பணத்தால்...

நம் சுய சந்தோசம்...
நம் சுய நலம்...
நாம் பணத்தால்
இன்று
எப்படி சுருங்கி போய் விட்டோம்....

நம்மையே 
அழித்து கொள்வதில்
கவலை படாத நாம்...
இந்த பூமி
மாசு அடைவதை பற்றியா
கவலைபடுவோம்?...

கருத்துகள் இல்லை: