என்னைப் பற்றி

எனது படம்
கனவுகளை விட நிஜங்களில் வாழ ஆசை...

வெள்ளி, 3 செப்டம்பர், 2010

உன் உயிரையாவது ...

எவருக்கும்
தெரியாமல் உன்னை
என்னுள்
புதைத்து வைத்திருந்தேன்...

யாருக்கும் தெரியாமல்
மறைந்து மறைந்து
மறைத்து 
காதல் செய்தோம்...
என்னடா...
என்னிடம் கூட சொல்லாமல்
மாயமாய்
மறைந்து போனாய்
இந்த பூமியை விட்டு.....

இன்று ஊரை கூட்டி
உனக்காக
ஒரு சொட்டு கண்ணீர் கூட
விட முடியாத
ஊமையாய் 
நான்....

எத்தனை முறை
சொல்லி இருப்பேன்
எனக்கு தாலி கட்ட சொல்லி...
அந்த தாலி
நம் காதலை
காப்பற்றி இருக்குமோ
இல்லையோ...
உன் உயிரையாவது
காப்பற்றி இருக்குமல்லவா?...

கருத்துகள் இல்லை: