என்னைப் பற்றி

எனது படம்
கனவுகளை விட நிஜங்களில் வாழ ஆசை...

வெள்ளி, 17 செப்டம்பர், 2010

பெண்கள் ஒரு காமகடை போல் ....

பெண்ணின்
தலைமுடி,
கண் ,புருவம் ,
காது,மூக்கு,
உதடு,வாய்
கழுத்து,மார்பு,
தொப்புள்,தொடை,
விரல்,நகம்
இப்படி அனைத்து
உடல் உறுப்புகளையும்
காம கிளர்ச்சி  உடையதாய்
காம பொருளாய்
கவிதையாய்
விற்பனை செய்கிறார்கள்......

இதனை பார்க்கும்
ஆண்கள்
பார்வையாலே
எல்லா பெண்களையும்
பலாத்காரம் செய்கிறார்கள்....

பெண்ணை
காம பொருள்களை
சுமக்கும்
காம கடை போல்
போதிக்கப்படுவது 
ஏன்?...

சமூகம்
பெண்ணை
நிர்வாணமாக்கி
வெறும் உடம்பாக
பார்ப்பது ஏன்?...

ஒரு வேடிக்கை
என்ன வென்றால்...
பெண்களே சில நேரம்
ஆண்களின் புகழ்ச்சிக்கு
அடிமையாகி...
"நாம்
ஆண்களின்
காமத்தை தீர்ப்பதற்காக தான் 
படைக்கப்பட்டு இருக்கிறோம்" என்று
பக்குவபட்டு கொள்வது தான்...

பெண்களே!
முகம் பார்க்கும்
கண்ணாடியில்
உங்கள் விழிகளை பார்த்து
ரசிக்கும் போது
கொஞ்சம் விழிப்புணர்வோடு  இருங்கள்...
அடுத்து
தோன்ற போகும்
சமூகமாவது
கவர்ச்சி மாயையில் இருந்து
தப்பி வாழட்டும்....

ஆம்
சகோதரிகளே...
நாம் படைக்க
இங்கே நிறைய இருக்கிறது!!!....







கருத்துகள் இல்லை: