என்னைப் பற்றி

எனது படம்
கனவுகளை விட நிஜங்களில் வாழ ஆசை...

வெள்ளி, 24 செப்டம்பர், 2010

நிலைகள் கடந்தது...

காதல்
விட்டு கொடுத்தலில் மட்டும்
வந்து விடுவதில்லை....
நமக்குள் இருக்கும் அன்பின்
வெளிப்பாடு தான் காதல்...

காதல்
கற்காலம் முதல்
எத்தனையோ காதலர்களை
சந்தித்து வருகிறது...
இந்த மண்
எத்தனையோ
காதல் கண்டிருக்கிறது?...

"காதல் என்பது
பிச்சை இல்லை...
யாசித்து பெற்று கொள்வதற்கு
ஒருவருக்கு மட்டும்
தன்னையே கொடுக்கும் தானம்"...

உண்மையான
காதல் பயப்படுவதில்லை...
உண்மையான காதல்
மலர்ந்து விட்டால்
மறைத்து மூட முடியாது...
நேசித்தவர்களிடம்
உடனே
வெளிப்படுத்தி விடும்...

தெய்வீக காதல் என்பது...
நேசிக்க தொடங்கியதிலிருந்து
ஒன்றாய்
உயிர் பிரியும் வரை
நிமிட நிமிடமாய்
காதலிக்கும்
அற்புதமான அதிசயம்...

காதல் வயப்படாத
மனிதர்கள் இருக்க முடியாது...
காதல்
பல்வேறு நிலைகள் 
தாண்டி இருக்கிறது...

கருத்துகள் இல்லை: