என்னைப் பற்றி

எனது படம்
கனவுகளை விட நிஜங்களில் வாழ ஆசை...

புதன், 22 செப்டம்பர், 2010

ஞானி....

ஞானி என்றால்
முற்றும் துறந்த முனிவர்
காமம் சுரக்காத
மனித  கடவுள் என்றல்லாம்
சொல்லிகொள்கிறோம்...
காமம் வராமல் இருக்க
அவன் ஒன்றும்
பசி இல்லாத மனிதன் அல்ல...

மனிதனாய் பிறந்தால்
பசியும் காமமும் உண்டு...
இரண்டையும் அடக்கினாலும்
உடல் கெட்டு போகும்...

இரண்டும் வரவில்லை என்றால்
ஏற்கனவே
உடல் கெட்டு போய்
இருக்கிறதென்று அர்த்தம்...

உயிர் போய் விடும்...

மனிதனாய் பிறந்த
அவனை கட்டுபாடாய் இருக்க
சொல்லி கட்டாயபடுத்துவது ஏன்?...
கடவுளை தொழும்
மனிதன் மட்டும்
காமம் கொள்ள கூடாதென்று
கடவுள் யாரிடமாவது
சொல்லி இருக்கிறாரா?..

கருத்துகள் இல்லை: