என்னைப் பற்றி

எனது படம்
கனவுகளை விட நிஜங்களில் வாழ ஆசை...

வியாழன், 9 செப்டம்பர், 2010

உன் மேல் சந்தேகம்...

நீ
சுதந்திரமாய் இரு...
உலகில்
உன்னால்
என்ன என்ன சுகம்
அனுபவிக்க முடியுமோ
அனுபவித்து கொள்...
உனக்கு
பிடித்த படி எல்லாம் 
முழுதாய் வாழ்ந்து கொள்...

உன் மேல் சந்தேகம் என்ற
ஒன்று
என்றும்
எனக்கு வராது...
ஏன் என்றால்
உன்னோடு இருக்கும்
உயிர்
நானடி...

நமக்காக
நம் மேல்
உண்மையாய்
யாரும் இல்லையோ?..என்று
நமக்கு தோணும் போது தான்
இந்த வாழ்க்கை வெறுத்து போகும்...

உன் வாழ்க்கையில்
கவலை என்ற ஒன்று
வருவதை
என்னால் தங்கி கொள்ள முடியாது...

"தைரியமாய் இரு"...
உனக்காக யாரும் இல்லை
என்ற நிலை வரும் போது கூட
இங்கே
நான் உனக்காக
காத்திருப்பேன் என்பதை
மறந்து விடாதே...
வற்றாத அன்போடு
என் ஆயுள்
உள்ள வரை....

"என் மேல்
இத்தனை அன்பா"?...என்று
நீ கேட்கும் போது லேசாய் வலிக்குதடி....
என் அன்பின் ஆழம் 
இன்னும் உனக்கு புரியவில்லையோ?என்று....

நான்
எதனை கொண்டு
நீருபிப்பது என்
உண்மை காதலை?!!!...

என்
இதயம் கிழித்து காட்ட
நான்
தேவ தூதுவன் இல்லையடி...
உன்னை
உண்மையாய் நேசிக்கும்
சாதாரண மனிதனடி....

கருத்துகள் இல்லை: