என்னைப் பற்றி

எனது படம்
கனவுகளை விட நிஜங்களில் வாழ ஆசை...

சனி, 17 பிப்ரவரி, 2018


நான் ஒரு
வேடதாரி
ஆம்
என் பெயர் தமிழன்....

உலகில் உள்ள
அனைத்து உயிர்களை
நேசிக்க கற்றுத் தரும்
காட்டு மிராண்டி...

மனிதனை
மனிதனாய்
பார்க்கும்
மனிதம் கொண்ட
மதவாதி...

நான் வணங்கும்
தெய்வம் மட்டுமே
உண்மை...
நீயும் அதையே
வணங்கவேண்டும்  என
கொலைகள்
செய்வோருக்கு....
"ஒன்றே குலம்
ஒருவனே தேவன்" என்று
சொல்லியதால்
நான்
தீவிரவாதி....

இனபற்று
பேசி "தீண்டாமை"
பேதம் கொள்ளும்
தங்களிடம்....
"மனித இனம்
வேறு
உயிரினத்துடன் கூடி
புதிய இனத்தை
இன்று வரை
இனப்பெருக்கம்
செய்யவில்லை"
என்ற உண்மை 
சொன்னால்
நான்
இனவாதி...

சாதியம்
பேசுபவர்களுக்கு
"ஜாதி இரண்டொழிய
வேரில்லை"
என்பதை சொன்னதால்
நான்
நாத்திகவாதி...

பூமியை கீறி
நாடுகளாய் பிரித்து
நாட்டுப்பற்று  என
அடித்து கொள்வீர்கள்...
"யாதும் ஊரே
யாவரும் கேளீர்"
என்று சொன்னால்
நான்
தேச துரோகி....

பரம்பரை
பெருமை பேசும்
நண்பர்களே...

நான் உங்கள்
தகப்பன்
ஆதி மனிதன்
"தமிழன்" சொல்கிறேன்...

"கல் தோன்றி
மண் தோன்றாக்
காலத்தே
வாளொடு
முன் தோன்றி
மூத்த குடி"
எங்களின்
வாரிசுகள் தான்
உலக மக்கள்
நீங்கள் எல்லாம்....

கர்வத்துடன் 
கர்ஜிக்கிறேன்...
நான்
மொழிகளின்
தாய் மொழி
"தமிழ் "பேசும்
தமிழன்டா...






உலகம் (தமிழ் தேசம்) மீட்போம்....

தமிழன் எல்லோரும்
❤கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே, வாளொடு  
முன் தோன்றி மூத்தகுடி❤ என்று
பெருமை பட பேசுகிறோம்...

இதன் முழு விளக்கம்

புலவர்.ஐயனாரிதனார்
எழுதிய
தமிழ் புறப்பொருள் இலக்கண நூலான 
புறப்பொருள்  வெண்பா மாலை - கரந்தை படலம் 351 குடி நிலையில் ,

மூத்த குடிமக்கள் பற்றிய குறிப்பு...

செய்யுள்:

பொய் அகல, நாளும் புகழ் விளைத்தல் என் வியப்பாம் ?
வையகம் போர்த்த, வியங்கு ஒலி நீர்  - கையகலக்
கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே, வாளொடு  
முன் தோன்றி மூத்தகுடி.

பொருள்:

உலகம் முழுதும்  தண்ணீரில் மூழ்கி ( வையம் போர்த்த வியங்கு ஒலி நீர்)
கொஞ்சம் கொஞ்சமாக நீர் விலக ( கையகலக்)
முதலில் மலை தெரிய ( கல் தோன்றி ) பின்
மண் தெரியும் காலத்திற்கு முன்பே (மண் தோன்றா)
புத்தியோடு தப்பித்த (வாளொடு )
முன் தோன்றி மூத்த குடி( மூத்த மனிதன்- தமிழன்)
உலகில் கெட்டவை அகல ( பொய் அகல)
தினமும் புதியவற்றை கண்டறிவதில் ( நாளும் புகழ் விளைத்தல் )
என்ன வியப்பு இருக்கிறது (என் வியப்பாம்)

உலகில் பிரளயம் ஏற்பட்ட போது தப்பித்த தமிழர்களே அதாவது
பிரளயத்திற்கு முன் தோன்றி வாழ்ந்த உலகின் மூத்த குடி என்பதையே
இப்பாடலில் சொல்லியிருக்கிறார்கள்.

தமிழ்,தமிழன் என்று பெருமை பேசிக் கொண்டால் மட்டும் போதாது....

உலகில் வேற்று மொழி, வேற்று மதம், வேற்று தேசம் என்று ஒதுக்கி வைத்து பேசாமல், 
அழிந்து போன மனித வரலாற்றை ஆய்விற்கு உட்படுத்த வேண்டும்...

விவிலியத்தில் பிரளயத்தின் வரலாற்றையும், மனித வளர்ச்சியை திருகுரானிலும்,நம் தேச வரலாற்றை பகவத்கீதையிலும் கண்டறிந்தால்
தான் தமிழர்கள் வரலாற்றை தொகுக்க முடியும்.

தமிழர் பெருமை பேசுவதற்காக
சொல்லபட்டதல்ல
மேற்கண்டவை...
உலகில் இருக்கும்
மனித இனம் - ஒரே
உறவுகள் என்பதை
சொல்வதற்கே...

தேசம்,இனம்,மதம்,ஜாதி ஒழித்து
மனிதம் கொண்ட மனிதர்களாய்
மாறுவோம்...
வேற்று கிரகவாசிகள்
வந்து நம்மை
தாக்குவதற்க்குள்....

செவ்வாய், 13 பிப்ரவரி, 2018

❤💜காதலர் தினம்💚💛

மொத்த உலகை
கட்டி ஆளும்
ஒற்றை கடவுள்
💓காதல்💘

மொத்த சுகத்தையும்
கொட்டி தரும்
ஒற்றை கனவு
💗காதல்💙

ஆணுக்கு ஆண்மையும்
பெண்ணுக்கு பெண்மையும்
மலர செய்வது
💘காதல்💘

சக்கரவர்த்தி என்றும்
சாமனியன் என்றும்
சொல்லி கொண்டாலும்
எல்லாம் சமம் என்ற
சமத்துவத்தை
கற்று தரும் வேதம்
💗காதல்💙

பூமியில் உள்ள
அத்தனை
உயிர்களையும்
கட்டுபடுத்தும்
மூன்றெழுத்தில் ஒரு
மந்திரம்
❤காதல்💗

💛காதல்💛
❤காதல்❤
💜காதல்💜
அத்தனையும்
பொய் என்றே
புலம்புகிறவர்கள்....
காதல் கிடைக்காதவர்களும்
காதலில் ஏமாந்தவர்களுமே...

❤காதல்❤
இன்னொருவர்
தருவதில்
இருப்பதல்ல...
நம்மை நாமே
நேசிப்பது...
நம்மை
நேசிப்பவர்களை
அங்கீகரிப்பது....

உருவமில்லா
ஒன்றிற்கு
உலகமே உருகும்
உணர்ச்சி பெருங்கடல்
❤காதல்💚
இது உண்மையும் அல்ல...
பொய்யும் அல்ல...

காதலை
காதலிக்க தெரிந்தவனுக்கு
காதல்
கொட்டி தரும்...
காதலிக்க தெரியாதவனுக்கு
எதனை தருவது?...

💘காதல்💘
சுகமானது...

நேசிக்கும் போதும்...
நேசிக்கப்படும் போதும்...



புதன், 7 பிப்ரவரி, 2018

மீன்களா உன் கண்கள்...

🐳கண்களை
மீன்கள்
என்கிறார்கள்...
இத்தனை நாள்
ஏன் என்று
எனக்கு புரியவில்லை...
உன்னை
அருகில்
பார்த்த போது தான்
அர்த்தம்
தெரிகிறது..
ஒரு நொடியில்
எத்தனை
துள்ளல்?...
உன் கண்களில்
மட்டுமல்ல...
என் இதயத்திலும்💓🐬💟....
  

அழகியடி நீ எனக்கு....

உன் பருவ அழகை பற்றி
நீ வர்ணிக்கும் போதெல்லாம்....
நான்
உன்னை
வர்ணித்து கொண்டே
தொடர்கிறேன்....

உச்சி முதல் பாதம் வரை
உன்னை பிடிக்கும்
மொத்தமாய்
அத்தனை
அழகியடி நீ....

உன் கூந்தலை
வர்ணிப்பதை
காட்டிலும்...
உன் கூந்தல்
தொடங்கும்
நெற்றி சுழியின்பிறை...
என் நெஞ்சில்
தினம் தினம்
வளர்கிறது...
என் இதழ் பதித்தே
கவி தொடங்கும்....

உன் கூந்தல்
மேகங்கள் அல்ல...
அதில் வாசனையும் இல்லை...
ஆனால்
என் இதயத்தை
கிழித்து
உன் பெயரை எழுதிய
ஊசி முனை....

என்னுள்
எழும்
வார்த்தைகளுக்கு 
விடை கேட்க வேண்டியதில்லை...
உன் புருவ அகராதி
தரும் 
ஒற்றை சிமிட்டல்
மொத்ததை
தந்து விடும்...

தோல்விகளால் என் வாழ்க்கை

கடந்து வந்த என் வாழ்க்கை.....
திரும்பி பார்க்கிறேன்...

பெரிதாய் ஒன்றும் இல்லை...
தோல்வி மட்டுமே
என் வரலாறாய்
மிஞ்சி நிற்கிறது.....

தானியங்கி (Automobile)பொறியியல் படித்து....

தன்னை கூட இயக்க தெரியாதவனாய் நான்....
என் கல்வி - ஏட்டு சுரக்காய்
கறிக்கு உதவவில்லை....

கவிஞனாய்...

காதல் கல்வெட்டுகளில்
தடம் பதிக்க நினைத்து
தடமின்றி போனேன்....
தாங்கி பிடிக்க
வேண்டிய நேரத்தில்
தந்தை தவறி போனதால்....

நடிகனாய்.....

திறமை என்பதெல்லாம்
வாய்ப்புகள்
கிடைத்த பின்
வளர்த்து கொள்ள
வேண்டியது...

நீ யார் ?
உனக்கு
நான்
ஏன் வாய்ப்பு தர வேண்டும் ?...
என கேட்ட பின்பு தான் தெரிந்தது
பழகியவனெல்லாம் நண்பன் அல்ல என்பது....

திரைபட இயக்குனர் ....

உனக்கேன்
இந்த வேலை
என சொல்லியதற்காகவே
நேசித்த தொழில்....

பணம் என்ற ஒன்று
இல்லை என்றால்
எத்தனை சுகமாய் இருக்கும்
என்பது
சக தொழிலாளி
சம்பளம் வாங்கும் போது
வேடிக்கை பார்க்கும்
உதவி இயக்குனராய்
என் கண்ணீர்
கதறிய போது
தோன்றியது.....

இயக்குனராய்
வெற்றி பெறுவதெல்லாம்
இறைவன் நினைத்தால் மட்டுமே
என்பதே நிஜம்...
இது புரிய
இழந்தவை
எத்தனை? ....

உலகில்
எல்லாம்
முன்பே தெரிந்தால்
எந்த
வேலை செய்யவும்
ஒருவனும் கிடைக்க மாட்டார்கள் அல்லவா?

நம்மால் வாழ்பவர்களை
பார்க்கும் போது...
நாம் ஏன்
வாழாமல் போனோம்
என்பது புரிகிறது
நம்மையே இழந்த பின்....

இன்று
என்னோடு
பயணிக்கும்
என் நண்பர்கள்
சந்தோசபட
என்னிடம்
நிறைய இருக்கிறது....
ஆம்...
என் தோல்விகள்
அவர்களை
நிச்சயம்
சந்தோசபட வைக்கும்...

"நல்லா படிக்கிறவன்னா
பேர் எடுத்த...
உனக்கு
நல்லா வேணும்"....
என்று
அவர்கள் சொல்வது
நல்லாவே கேட்கிறது....

ஜோதிடராய்...

வாழ்க்கையில்
நான்
நினைத்ததெல்லாம்
நடந்த போது
நானும்
நாத்தீகன் தான்....

இன்று
நம்பிக்கையோடு
உயிர் வாழ்கிறேன் என்றால்
காரணம்-ஜோதிட கணிதம்...

நாம் நினைப்பது நடக்கவில்லை என்றாலும்
நடப்பதை நேசிக்க கற்று தந்தது ஜோதிடம்...
நம்மை திடமாக்க....

தோற்று போனவர்களை
தேற்ற
என்னிடம்
இருப்பவை எல்லாம்
நான் இழந்தவைகள் தான்....

"உங்களுக்கென்ன" என்று
என்னை
உயர்த்தியும்,தாழ்த்தியும்
சொல்லும் போதெல்லலாம்
வெளியே சிரித்து
உள்ளே
நிறையவே அழுகிறேன்
என் இனிய எதிரிகளே....
என் இலக்கை
இன்னும்
அடைய முடியவில்லை என்பதால்...

பணம் செய்ய தெரிந்தவன் மட்டுமே
இங்கே மதிக்கப்படும் போது...
மனம் பேசுவதெல்லாம்
இங்குள்ள மனிதர்களுக்கு
எங்கே புரிய போகிறது ?...

வெற்றிகளில் சிலருக்கு வாழ்க்கை ....
ஏனோ தோல்விகளில் என் வரலாறு ...

பிறர் நம்மை வாழ்த்தும்
வாழ்த்துகள் மட்டும்
வாழ்க்கையை தருவதில்லை...

வாழ்க்கை
நாம்
எதிர்பாராததை
எதிர்பாராத நேரத்தில் தந்து
நம்மை அதிர வைக்கும்....

வாழ வேண்டிய வயதில்
துன்பங்களை தந்து விட்டு...
இனி தருவதில்
என்ன பயன்?

வேண்டுதல் நிறைவேற்றிய
இறைவனுக்கு
வேண்டுமானால்
இன்பம் ஏற்படலாம்....
பக்தனாய்
வேண்டுகிறேன்...
"பசிக்கும் போது
உணவு தாருங்கள்".....

என்னை
தோல்வியாளனாய்
பார்க்க விரும்பும்
என் அன்புக்குரியவர்களே....
நான் வாழ்ந்ததற்கான-எனக்கான
சில தடயங்களை
விட்டு தான் செல்கிறேன்...
உங்கள்
உதவியால்....

எதிரியை விட
நம் மேல் அக்கறை
கொள்பவர்
உலகில்
யாரும் இருந்து விட முடியாது....

சராசரி வாழ்க்கை வாழ
நாம் நம்மை 
தயார் செய்யும் போதெல்லாம்
நம்மை
உசுப்பேற்றுவது போல்...

ஒரு மாதம் ஊரில் இருந்தால்
"சென்னைக்கு போறதில்லை போல"
"வந்தாச்சா ஊருக்கு"
"அப்பவே தெரியும்"என
நக்கல் பேச்சும்
நையாண்டி பார்வையும்
முகஸ்துதி செய்யும்
அன்பானவர்கள்..
குத்தி காட்டி
பேசும் போதெல்லாம்

சினிமா என்ற
ஒற்றை இலட்சியத்திற்காய்
தொலைக்கும்
தன் மானத்தை மீண்டும்
யார் தருவது?...

உணவின்றி
ஒரு வேளை
இருக்க முடியாதவர்களுக்கு
தெரியாது...
சினிமா
ஒரு பெருந்தவம் என்பது...
வரம் எதிர் பார்த்து
சாபம் பெற்று
செல்பவர்கள் தான்
இங்கு அதிகம்.....

இறைவா !
கலைஞன் 
ஒருவனை
படைக்கும் போது மட்டும்
ஒரு வேண்டுகோள்....
அவனுக்கு மட்டுமின்றி
அவனை சார்ந்தவர்களையும்
பசி அற்றவர்களாக
படைத்து விடு ....

ஏனென்றால்
தன் பசியை
அடக்க தெரிந்த
கலைஞனுக்கு
தன்னுடன்
இருப்பவர்களின்
பசியை
அடக்க வழி தெரிவதில்லை...

காதலை காப்பாற்றுங்கள்

காதல் வயப்படுதல்
இன்று அதிகமாய்
ஏற்பட்டு மறைகிறது...
காரணம்...
காதல்
ஒவ்வொருவருக்குள்ளும்  
சென்று 
தன்னை  நிலை நிறுத்த
முயற்சித்து பார்க்கிறது......

சில நிமிடங்களில்
விரட்ட படுகிறது ...
சில நாட்களில் விரட்டப்படுகிறது...
சில மாதங்களில் விரட்டப்படுகிறது...
அதற்குள் யாரும்
அதை விரும்புவதில்லை என்று தெரிகிறது....
காதல்...
ஒரு நாள்
இந்த உலகத்தை விட்டு
துரத்தப்படும்....
ஒரு சிலராவது
காதல் நினைவுகளை
சேமித்து வைத்து கொள்ளுங்கள்...
உலகம் அழியும்
காலத்தையாவது
தள்ளி போடுவதற்காக....

திங்கள், 26 செப்டம்பர், 2016

மதம்




புத்தர் பிறந்தது
புத்த மதம்  தோன்றியது
நம் மண்ணில் தான்...
இங்கே நிலை பெற்றதா?...
இந்தியாவில்
இந்து மதம் இருக்கிறது...

ஜீசஸ் பிறந்த
ஜெருசலம் நாட்டில்
ஜுடிசம் என்ற மதம்
ஒளியை வணங்குகிறார்கள்...
மோசஸ் என்பவரால்
கிறிஸ்து பிறப்பிற்கு
1300 ஆண்டுகளுக்கு
முன் தோன்றிய மதம்...



புத்த மதத்தை
உலகம் எங்கும்
கொண்டு சேர்த்த பங்கு
அசோகருக்கு உண்டு....

அவர் கலிங்க போரில்
ஓடிய ரத்தத்தை கண்டும்
பிணங்களின்
அவலங்களை பார்த்தும்
மனம் மாறிய வரலாறு
மறந்து
அதை பின்பற்றும்  நாடுகள்...
இலங்கை ,சீனா...
கை விட்டதேன்?...

உலகில்
எத்தனை
மதம் உண்டு தெரியுமா?...
எத்தனை பேருக்கு தெரியும்
உலகத்தின் பரப்பளவு
எத்தனை மைல் தூரம் என்று?...

மத சண்டை போடும்
மனிதர்களுக்கு
வரலாறு தெரிய வேண்டும்....

மனிதர்களில்
மதம் மாறி வாழ்தவர்களும் இல்லை
 







Virus-free. www.avast.com

புதன், 13 அக்டோபர், 2010

நீயா?...

கதவை தாளிட்டும்
ஜன்னல் அடைத்தும்...
குறைந்த வெளிச்சத்தில்
நான் உடை மாற்றுகிறேன்...
யாரோ
என்னை பார்ப்பது போல்
வெட்கம் கொள்கிறேன்...
நீயா?...

கூந்தல்...

இன்று
என் கூந்தல்
பிண்ணிக்கொள்ள
போராட்டம்...
அத்தனை சிக்கல்..
ஏன் என்று கேட்டேன்?
கூந்தல் சொல்கிறது...
இனி
உன் விரல்கள் தவிர
வேறு நுழைய
கூடாதாம்...
எனக்குள்
இன்று சிக்கல்...
என் பேச்சை கேட்காத
என் உடலை
நானும் ரசிக்கிறேனடா ஏன்??!!....

ம்ம்...

அவசரம்
அவசரமாய்
நான் கிளம்புகிறேன்...
குளித்தும்
குளிக்காமலும்...
சாப்பிட்டும்
சாப்பிடாமலும்...
ஏன்?...
இந்த வாழ்கை கூட
பிடிக்காமல் பிடித்தும்...
ஆனால்
உன்னை
பார்த்த நொடி முதலாய்
உன்னோடு வாழாமலே
வாழ்கிறேன்
சுகமாய்
ஏனடா?...

ஏன்?..

இந்த பயண நெரிசல்
என்னை தினம் பாடாய் படுத்துகிறது...
இருந்தும்
ஏதோ வேறு
வழி இன்றி
சமாளித்து கொண்டு
கடந்து கொள்கிறேன்...

சாலை
தண்டவாளம்...
கடந்து செல்லும்
வாகனம் தண்டி
என் மனம்
ஓடி கொண்டே இருக்கும்..
தினம் தினம்...
என் அலுவலக நாற்காலியில்
அமரும் வரை...
இன்று...
புதிய விடியல்...
புதிய ஊரில்
பயணிப்பது போல்
நான் உணர்கிறேன்...
எல்லாம் புதிய உலகமாய்...
ஏன்?...
நான் கூட புதியவளாய்...
ஏனடா?...

ரசித்து...

நானும்
எத்தனையோ நாட்கள்
இதே கண்ணாடியில்
முகம் பார்க்கிறேன்...
எனக்கே
திருப்தி தரும்
அழகில் நான் இல்லை...
என் கண்களும்...
என் கன்னங்களும் பற்றி
நீ சொல்லிய பின்னே...
நான் வியந்து போனேன்...
என் அழகாய்
நானே
நிஜமாய் ரசித்து...

நான்...

நான்
நீயாய் மாறி
என்னையே காதல் கொள்கிறேன்...
நான் கூட
வெட்கப்படுகிறேன்
என்னிடம்?...
ஆம்ம்...
என்னையே
என்னிடம் கொண்டு சேர்த்தவனே...
நீ யாரடா?...

எப்போது?...

இன்றைய பயணம்
இயல்பாய் இல்லை...
அங்கும் இங்கும்
வேடிக்கை பார்த்து கொண்டே
செல்லும் நான்...
உன் குறுஞ்செய்திக்காய்
என் கைபேசியை
பார்த்தபடியே நகர்கிறேன்..
ஏய்...
காதல் தந்தவனே...
என்னோடு
உன் பயணம்
எப்போது?...

நான் என்ன செய்ய?...

நான்
பார்க்கின்றவற்றை
எல்லாம்
கவிதை ஆக்குவதாய் சொல்கிறாய்...
என் மூலம்
இந்த உலகை கண்டு
வர்ணிப்பவனே!...
என்னுள் நீ
எப்போதோ வந்து விட்டாய்?...
என் முன்
எப்போது நீ வர போகிறாய்?..
நேரில்
என்னை வர்ணித்து
எப்படி வாரி கொள்ள போகிறாய்?...
வெட்கம்
ஏனடா
உன்னிடம் தொலைந்து போனது?...
உன் தழுவலில்
மீண்டும்
வெட்கம் வந்து
என்னிடம் பற்றி கொள்ள
நான்
என்ன செய்ய வேண்டும்
உன்னை?....

கடற்கரை காற்றே...

உன்னிடம்
ஏதோ காற்று வந்து
உரசுவதாய் சொல்கிறாய்...

நான் தான்
கடற்கரை காற்றிடம்
சொன்னேன்...
உனக்கும்
அந்த சுகம்
கொடுக்க சொல்லி...

சுகமாய்
இருக்குதடா
நாம் சுவாசிப்பது கூட...

உன் மேல்...

உன் மேல்
ஒரு ஈர்ப்பு...
இது காதலா?
நான் எப்போது
உன் மேல் காதல் கொண்டேன்?!...
யோசித்து
யோசித்து பார்க்கிறேன்...
கண்டிப்பாய்
இது காதல் இல்லை...
சீ....
போடா...
வெட்கமாய் இருக்கிறது...
நான் உன்னிடம்
பேசிய உடன்
உன் பதிலுக்காய்
காத்திருந்த நொடிகளில்
உன் காதல் உயிர் என்னுள்...
சீ..போடா..
இது காதல் இல்லை...
அதற்கும் மேலே..
ஏனடா?
இப்படி நான்..
இந்த சில நொடிகளில்
என்னுள் மாற்றம்?.

வியாழன், 30 செப்டம்பர், 2010

மனிதன்...

மனிதன் பயந்தவற்றை
எல்லாம்
வழிபட தொடங்கினான்...
மின்னல்,இடி,
புயல்,
வெப்பம், குளிர்,
இவைகளுக்கு
பயந்த மனிதன் ...
இயற்கையை வணங்கினான்...

இயற்கையை
வெல்ல வெல்ல
அடுத்தவற்றை வழிபடுகிறான்...
அவனவன் இஷ்டம் போல்
வழிபாட்டு முறைகள்...
முன்னோர்களையும்
அவர்களுக்கு
உதவியவர்களையும்
கடவுளாய் வழிபட்டான்...

இன்று
நம்மையும் மீறிய
ஒரு மஹா சக்தி இருப்பதை
யாரும் மறுப்பதற்கில்லை...

அந்த சக்தி யார்?...
யாருக்கும் தெரியாது?...
"தான் கண்டதே தெய்வம்" என்றால்
பரவாயில்லை...
"தான் கண்டது  மட்டுமே
கடவுள்" என்றான் ...

தான் மட்டும்
வழிபட்டு கொண்டால் மட்டும்
போதாது
தன்னை சார்ந்தவர்களும்
வழிபடவேண்டும் என்று
கட்டாய படுத்துகிறான்...

தான் வழிபடும் தெய்வம் மட்டுமே
வலிமையானது...
மற்றவை சாத்தன் என்றெல்லாம்
சொல்லுகிறான்...

மதங்களால்
மனிதர்கள் பிரிந்து
சண்டை இடுகிறார்கள்...

இன்று
மொழி,இனம்,
நிறம்,மதம் ,
நாடு கடந்து
மனிதன் சிந்திக்க ,
பயணிக்க நினைத்து
மனித நேயம் தேடி அலைகிறான்!?...

ஏன்
இந்த மனிதர்களுக்கு மட்டும்
புத்தி வர
பல நூற் றாண்டுகள் தேவைப்படுகிறது?...

ஓ...
இதை தான்
ஆறறிவு கடவுள் என்கிறார்களோ?...

மடையர்களா!?..

இந்திய வரலாறு
நிறைய விசயங்கள் கொண்டது...
இந்தியா, ஸ்ரீலங்கா, பாக்கிஸ்தான்
ஒன்றாய்  இருந்தது என்பதை
மறுக்க முடியாது......

மக்கள் எப்போதும்
ஒற்றுமையாய் இருந்ததில்லை...
இங்கு மட்டும் இல்லை
உலகம் முழுதும்...

குறுநில மன்னர்களால்
அங்கங்கு கூட்டம்  கூட்டமாய்
மனிதர்கள் வாழ்ந்தவர்கள்...
பத்து தலைமுறைக்கு முன்னால்
எந்த மதமும் இல்லை
ஜாதிகளும் இல்லை...

நம் ஒற்றுமை குறைவை
காரணமாய் வைத்து
ஆங்கிலேயர்கள்
நம் நாட்டின்
இயற்கை வளங்களை
கொள்ளை அடித்து
தன் தேசத்தை(லண்டன்)
சொர்க்கபுரியாய் மாற்றி கொண்டார்கள்...

நாம் ஒன்று பட
எத்தனை ஆண்டுகள் ஆனது?..
செல்லும் போது
பிரிவினை செய்து விட்டு
வினை விதைத்தே சென்றார்கள்...

நாம் அனைவரும்
ஏதோ ஒரு விதத்தில்
உடன் பிறந்த சகோதரர்கள்...
இது வரலாற்று உண்மை...
ஆனாலும் நாம் அப்படியா?...
இன்னும்
நாம் வெறி கொண்டு
எதை சாதிக்கிறோமோ இல்லையோ...
நம்மையே அழித்து கொல்வோம்...

முஸ்லிம் இனவுணர்வுகளை கொண்டு
காஷ்மீர் பிரதேசத்தால்
இந்தியாவை அழிப்பதாய் சொல்லியே
பாக்கிஸ்தான் அழிகிறது...
தீவிரவாதிகளிடம் இருந்து
இன்னொரு சுதந்திரம் வாங்க
பாகிஸ்தானியர்கள் 
போராடித்தான் ஆக வேண்டும்...

தமிழ் உணர்வுகளை கொண்டே
இலங்கை அழிகிறது....
சிங்களனும், தமிழனும்
அடித்துகொண்டால்
வேற்று தேசத்தின்
அடிமைகளாய் மாறி
இன்னொரு சுதந்திரத்திற்காய்
அலையத்தான் போகிறார்கள்?...


இன்று
நாம் இந்தியர்களோ இல்லையோ
நாம் சகோதரர்கள்...
பிரிந்த பின்
நமக்கு நாமே
சண்டை இட்டு கொள்வதற்கா
சுதந்திரம் பெற்றோம்?...

சுதந்திரத்தை
தந்திரமாய் தந்து
நம்மை நாமே
கொன்று கொல்ல
செய்துவிட்டார்கள்...

வரலாறு என்பது
பொழுது போக்கிற்காய் படிப்பதல்ல...
நம்மை
திருத்தி கொள்ளதான் என்பதை
படிக்க மறுக்கிறார்கள்...

நம் ஒற்றுமைக்கெல்லாம்
வானத்தில் இருந்தெல்லாம்
கடவுள் குதிக்க முடியாது
மடையர்களா!...