கதவை தாளிட்டும்
ஜன்னல் அடைத்தும்...
குறைந்த வெளிச்சத்தில்
நான் உடை மாற்றுகிறேன்...
யாரோ
என்னை பார்ப்பது போல்
வெட்கம் கொள்கிறேன்...
நீயா?...
என்னைப் பற்றி
புதன், 13 அக்டோபர், 2010
கூந்தல்...
இன்று
என் கூந்தல்
பிண்ணிக்கொள்ள
போராட்டம்...
அத்தனை சிக்கல்..
ஏன் என்று கேட்டேன்?
கூந்தல் சொல்கிறது...
இனி
உன் விரல்கள் தவிர
வேறு நுழைய
கூடாதாம்...
எனக்குள்
இன்று சிக்கல்...
என் பேச்சை கேட்காத
என் உடலை
நானும் ரசிக்கிறேனடா ஏன்??!!....
என் கூந்தல்
பிண்ணிக்கொள்ள
போராட்டம்...
அத்தனை சிக்கல்..
ஏன் என்று கேட்டேன்?
கூந்தல் சொல்கிறது...
இனி
உன் விரல்கள் தவிர
வேறு நுழைய
கூடாதாம்...
எனக்குள்
இன்று சிக்கல்...
என் பேச்சை கேட்காத
என் உடலை
நானும் ரசிக்கிறேனடா ஏன்??!!....
ம்ம்...
அவசரம்
அவசரமாய்
நான் கிளம்புகிறேன்...
குளித்தும்
குளிக்காமலும்...
சாப்பிட்டும்
சாப்பிடாமலும்...
ஏன்?...
இந்த வாழ்கை கூட
பிடிக்காமல் பிடித்தும்...
ஆனால்
உன்னை
பார்த்த நொடி முதலாய்
உன்னோடு வாழாமலே
வாழ்கிறேன்
சுகமாய்
ஏனடா?...
அவசரமாய்
நான் கிளம்புகிறேன்...
குளித்தும்
குளிக்காமலும்...
சாப்பிட்டும்
சாப்பிடாமலும்...
ஏன்?...
இந்த வாழ்கை கூட
பிடிக்காமல் பிடித்தும்...
ஆனால்
உன்னை
பார்த்த நொடி முதலாய்
உன்னோடு வாழாமலே
வாழ்கிறேன்
சுகமாய்
ஏனடா?...
ஏன்?..
இந்த பயண நெரிசல்
என்னை தினம் பாடாய் படுத்துகிறது...
இருந்தும்
ஏதோ வேறு
வழி இன்றி
சமாளித்து கொண்டு
கடந்து கொள்கிறேன்...
என்னை தினம் பாடாய் படுத்துகிறது...
இருந்தும்
ஏதோ வேறு
வழி இன்றி
சமாளித்து கொண்டு
கடந்து கொள்கிறேன்...
சாலை
தண்டவாளம்...
கடந்து செல்லும்
வாகனம் தண்டி
என் மனம்
ஓடி கொண்டே இருக்கும்..
தினம் தினம்...
என் அலுவலக நாற்காலியில்
அமரும் வரை...
இன்று...
புதிய விடியல்...
புதிய ஊரில்
பயணிப்பது போல்
நான் உணர்கிறேன்...
எல்லாம் புதிய உலகமாய்...
ஏன்?...
நான் கூட புதியவளாய்...
ஏனடா?...
ரசித்து...
நானும்
எத்தனையோ நாட்கள்
இதே கண்ணாடியில்
முகம் பார்க்கிறேன்...
எனக்கே
திருப்தி தரும்
அழகில் நான் இல்லை...
என் கண்களும்...
என் கன்னங்களும் பற்றி
நீ சொல்லிய பின்னே...
நான் வியந்து போனேன்...
என் அழகாய்
நானே
நிஜமாய் ரசித்து...
எத்தனையோ நாட்கள்
இதே கண்ணாடியில்
முகம் பார்க்கிறேன்...
எனக்கே
திருப்தி தரும்
அழகில் நான் இல்லை...
என் கண்களும்...
என் கன்னங்களும் பற்றி
நீ சொல்லிய பின்னே...
நான் வியந்து போனேன்...
என் அழகாய்
நானே
நிஜமாய் ரசித்து...
நான்...
நான்
நீயாய் மாறி
என்னையே காதல் கொள்கிறேன்...
நான் கூட
வெட்கப்படுகிறேன்
என்னிடம்?...
ஆம்ம்...
என்னையே
என்னிடம் கொண்டு சேர்த்தவனே...
நீ யாரடா?...
நீயாய் மாறி
என்னையே காதல் கொள்கிறேன்...
நான் கூட
வெட்கப்படுகிறேன்
என்னிடம்?...
ஆம்ம்...
என்னையே
என்னிடம் கொண்டு சேர்த்தவனே...
நீ யாரடா?...
எப்போது?...
இன்றைய பயணம்
இயல்பாய் இல்லை...
அங்கும் இங்கும்
வேடிக்கை பார்த்து கொண்டே
செல்லும் நான்...
உன் குறுஞ்செய்திக்காய்
என் கைபேசியை
பார்த்தபடியே நகர்கிறேன்..
ஏய்...
காதல் தந்தவனே...
என்னோடு
உன் பயணம்
எப்போது?...
இயல்பாய் இல்லை...
அங்கும் இங்கும்
வேடிக்கை பார்த்து கொண்டே
செல்லும் நான்...
உன் குறுஞ்செய்திக்காய்
என் கைபேசியை
பார்த்தபடியே நகர்கிறேன்..
ஏய்...
காதல் தந்தவனே...
என்னோடு
உன் பயணம்
எப்போது?...
நான் என்ன செய்ய?...
நான்
பார்க்கின்றவற்றை
எல்லாம்
கவிதை ஆக்குவதாய் சொல்கிறாய்...
என் மூலம்
இந்த உலகை கண்டு
வர்ணிப்பவனே!...
என்னுள் நீ
எப்போதோ வந்து விட்டாய்?...
என் முன்
எப்போது நீ வர போகிறாய்?..
நேரில்
என்னை வர்ணித்து
எப்படி வாரி கொள்ள போகிறாய்?...
வெட்கம்
ஏனடா
உன்னிடம் தொலைந்து போனது?...
உன் தழுவலில்
மீண்டும்
வெட்கம் வந்து
என்னிடம் பற்றி கொள்ள
நான்
என்ன செய்ய வேண்டும்
உன்னை?....
பார்க்கின்றவற்றை
எல்லாம்
கவிதை ஆக்குவதாய் சொல்கிறாய்...
என் மூலம்
இந்த உலகை கண்டு
வர்ணிப்பவனே!...
என்னுள் நீ
எப்போதோ வந்து விட்டாய்?...
என் முன்
எப்போது நீ வர போகிறாய்?..
நேரில்
என்னை வர்ணித்து
எப்படி வாரி கொள்ள போகிறாய்?...
வெட்கம்
ஏனடா
உன்னிடம் தொலைந்து போனது?...
உன் தழுவலில்
மீண்டும்
வெட்கம் வந்து
என்னிடம் பற்றி கொள்ள
நான்
என்ன செய்ய வேண்டும்
உன்னை?....
கடற்கரை காற்றே...
உன்னிடம்
ஏதோ காற்று வந்து
உரசுவதாய் சொல்கிறாய்...
ஏதோ காற்று வந்து
உரசுவதாய் சொல்கிறாய்...
நான் தான்
கடற்கரை காற்றிடம்
சொன்னேன்...
உனக்கும்
அந்த சுகம்
கொடுக்க சொல்லி...
சுகமாய்
இருக்குதடா
நாம் சுவாசிப்பது கூட...
உன் மேல்...
உன் மேல்
ஒரு ஈர்ப்பு...
இது காதலா?
நான் எப்போது
உன் மேல் காதல் கொண்டேன்?!...
யோசித்து
யோசித்து பார்க்கிறேன்...
கண்டிப்பாய்
இது காதல் இல்லை...
சீ....
போடா...
வெட்கமாய் இருக்கிறது...
நான் உன்னிடம்
பேசிய உடன்
உன் பதிலுக்காய்
காத்திருந்த நொடிகளில்
உன் காதல் உயிர் என்னுள்...
சீ..போடா..
இது காதல் இல்லை...
அதற்கும் மேலே..
ஏனடா?
இப்படி நான்..
இந்த சில நொடிகளில்
என்னுள் மாற்றம்?.
ஒரு ஈர்ப்பு...
இது காதலா?
நான் எப்போது
உன் மேல் காதல் கொண்டேன்?!...
யோசித்து
யோசித்து பார்க்கிறேன்...
கண்டிப்பாய்
இது காதல் இல்லை...
சீ....
போடா...
வெட்கமாய் இருக்கிறது...
நான் உன்னிடம்
பேசிய உடன்
உன் பதிலுக்காய்
காத்திருந்த நொடிகளில்
உன் காதல் உயிர் என்னுள்...
சீ..போடா..
இது காதல் இல்லை...
அதற்கும் மேலே..
ஏனடா?
இப்படி நான்..
இந்த சில நொடிகளில்
என்னுள் மாற்றம்?.
வியாழன், 30 செப்டம்பர், 2010
மனிதன்...
மனிதன் பயந்தவற்றை
எல்லாம்
வழிபட தொடங்கினான்...
மின்னல்,இடி,
புயல்,
வெப்பம், குளிர்,
இவைகளுக்கு
பயந்த மனிதன் ...
இயற்கையை வணங்கினான்...
இயற்கையை
வெல்ல வெல்ல
அடுத்தவற்றை வழிபடுகிறான்...
அவனவன் இஷ்டம் போல்
வழிபாட்டு முறைகள்...
முன்னோர்களையும்
அவர்களுக்கு
உதவியவர்களையும்
கடவுளாய் வழிபட்டான்...
இன்று
நம்மையும் மீறிய
ஒரு மஹா சக்தி இருப்பதை
யாரும் மறுப்பதற்கில்லை...
அந்த சக்தி யார்?...
யாருக்கும் தெரியாது?...
"தான் கண்டதே தெய்வம்" என்றால்
பரவாயில்லை...
"தான் கண்டது மட்டுமே
கடவுள்" என்றான் ...
தான் மட்டும்
வழிபட்டு கொண்டால் மட்டும்
போதாது
தன்னை சார்ந்தவர்களும்
வழிபடவேண்டும் என்று
கட்டாய படுத்துகிறான்...
தான் வழிபடும் தெய்வம் மட்டுமே
வலிமையானது...
மற்றவை சாத்தன் என்றெல்லாம்
சொல்லுகிறான்...
மதங்களால்
மனிதர்கள் பிரிந்து
சண்டை இடுகிறார்கள்...
இன்று
மொழி,இனம்,
நிறம்,மதம் ,
நாடு கடந்து
மனிதன் சிந்திக்க ,
பயணிக்க நினைத்து
மனித நேயம் தேடி அலைகிறான்!?...
ஏன்
இந்த மனிதர்களுக்கு மட்டும்
புத்தி வர
பல நூற் றாண்டுகள் தேவைப்படுகிறது?...
ஓ...
இதை தான்
ஆறறிவு கடவுள் என்கிறார்களோ?...
எல்லாம்
வழிபட தொடங்கினான்...
மின்னல்,இடி,
புயல்,
வெப்பம், குளிர்,
இவைகளுக்கு
பயந்த மனிதன் ...
இயற்கையை வணங்கினான்...
இயற்கையை
வெல்ல வெல்ல
அடுத்தவற்றை வழிபடுகிறான்...
அவனவன் இஷ்டம் போல்
வழிபாட்டு முறைகள்...
முன்னோர்களையும்
அவர்களுக்கு
உதவியவர்களையும்
கடவுளாய் வழிபட்டான்...
இன்று
நம்மையும் மீறிய
ஒரு மஹா சக்தி இருப்பதை
யாரும் மறுப்பதற்கில்லை...
அந்த சக்தி யார்?...
யாருக்கும் தெரியாது?...
"தான் கண்டதே தெய்வம்" என்றால்
பரவாயில்லை...
"தான் கண்டது மட்டுமே
கடவுள்" என்றான் ...
தான் மட்டும்
வழிபட்டு கொண்டால் மட்டும்
போதாது
தன்னை சார்ந்தவர்களும்
வழிபடவேண்டும் என்று
கட்டாய படுத்துகிறான்...
தான் வழிபடும் தெய்வம் மட்டுமே
வலிமையானது...
மற்றவை சாத்தன் என்றெல்லாம்
சொல்லுகிறான்...
மதங்களால்
மனிதர்கள் பிரிந்து
சண்டை இடுகிறார்கள்...
இன்று
மொழி,இனம்,
நிறம்,மதம் ,
நாடு கடந்து
மனிதன் சிந்திக்க ,
பயணிக்க நினைத்து
மனித நேயம் தேடி அலைகிறான்!?...
ஏன்
இந்த மனிதர்களுக்கு மட்டும்
புத்தி வர
பல நூற் றாண்டுகள் தேவைப்படுகிறது?...
ஓ...
இதை தான்
ஆறறிவு கடவுள் என்கிறார்களோ?...
மடையர்களா!?..
இந்திய வரலாறு
நிறைய விசயங்கள் கொண்டது...
இந்தியா, ஸ்ரீலங்கா, பாக்கிஸ்தான்
ஒன்றாய் இருந்தது என்பதை
மறுக்க முடியாது......
மக்கள் எப்போதும்
ஒற்றுமையாய் இருந்ததில்லை...
இங்கு மட்டும் இல்லை
உலகம் முழுதும்...
குறுநில மன்னர்களால்
அங்கங்கு கூட்டம் கூட்டமாய்
மனிதர்கள் வாழ்ந்தவர்கள்...
பத்து தலைமுறைக்கு முன்னால்
எந்த மதமும் இல்லை
ஜாதிகளும் இல்லை...
நம் ஒற்றுமை குறைவை
காரணமாய் வைத்து
ஆங்கிலேயர்கள்
நம் நாட்டின்
இயற்கை வளங்களை
கொள்ளை அடித்து
தன் தேசத்தை(லண்டன்)
சொர்க்கபுரியாய் மாற்றி கொண்டார்கள்...
நாம் ஒன்று பட
எத்தனை ஆண்டுகள் ஆனது?..
செல்லும் போது
பிரிவினை செய்து விட்டு
வினை விதைத்தே சென்றார்கள்...
நாம் அனைவரும்
ஏதோ ஒரு விதத்தில்
உடன் பிறந்த சகோதரர்கள்...
இது வரலாற்று உண்மை...
ஆனாலும் நாம் அப்படியா?...
இன்னும்
நாம் வெறி கொண்டு
எதை சாதிக்கிறோமோ இல்லையோ...
நம்மையே அழித்து கொல்வோம்...
முஸ்லிம் இனவுணர்வுகளை கொண்டு
காஷ்மீர் பிரதேசத்தால்
இந்தியாவை அழிப்பதாய் சொல்லியே
பாக்கிஸ்தான் அழிகிறது...
தீவிரவாதிகளிடம் இருந்து
இன்னொரு சுதந்திரம் வாங்க
பாகிஸ்தானியர்கள்
போராடித்தான் ஆக வேண்டும்...
தமிழ் உணர்வுகளை கொண்டே
இலங்கை அழிகிறது....
சிங்களனும், தமிழனும்
அடித்துகொண்டால்
வேற்று தேசத்தின்
அடிமைகளாய் மாறி
இன்னொரு சுதந்திரத்திற்காய்
அலையத்தான் போகிறார்கள்?...
இன்று
நாம் இந்தியர்களோ இல்லையோ
நாம் சகோதரர்கள்...
பிரிந்த பின்
நமக்கு நாமே
சண்டை இட்டு கொள்வதற்கா
சுதந்திரம் பெற்றோம்?...
சுதந்திரத்தை
தந்திரமாய் தந்து
நம்மை நாமே
கொன்று கொல்ல
செய்துவிட்டார்கள்...
வரலாறு என்பது
பொழுது போக்கிற்காய் படிப்பதல்ல...
நம்மை
திருத்தி கொள்ளதான் என்பதை
படிக்க மறுக்கிறார்கள்...
நம் ஒற்றுமைக்கெல்லாம்
வானத்தில் இருந்தெல்லாம்
கடவுள் குதிக்க முடியாது
மடையர்களா!...
நிறைய விசயங்கள் கொண்டது...
இந்தியா, ஸ்ரீலங்கா, பாக்கிஸ்தான்
ஒன்றாய் இருந்தது என்பதை
மறுக்க முடியாது......
மக்கள் எப்போதும்
ஒற்றுமையாய் இருந்ததில்லை...
இங்கு மட்டும் இல்லை
உலகம் முழுதும்...
குறுநில மன்னர்களால்
அங்கங்கு கூட்டம் கூட்டமாய்
மனிதர்கள் வாழ்ந்தவர்கள்...
பத்து தலைமுறைக்கு முன்னால்
எந்த மதமும் இல்லை
ஜாதிகளும் இல்லை...
நம் ஒற்றுமை குறைவை
காரணமாய் வைத்து
ஆங்கிலேயர்கள்
நம் நாட்டின்
இயற்கை வளங்களை
கொள்ளை அடித்து
தன் தேசத்தை(லண்டன்)
சொர்க்கபுரியாய் மாற்றி கொண்டார்கள்...
நாம் ஒன்று பட
எத்தனை ஆண்டுகள் ஆனது?..
செல்லும் போது
பிரிவினை செய்து விட்டு
வினை விதைத்தே சென்றார்கள்...
நாம் அனைவரும்
ஏதோ ஒரு விதத்தில்
உடன் பிறந்த சகோதரர்கள்...
இது வரலாற்று உண்மை...
ஆனாலும் நாம் அப்படியா?...
இன்னும்
நாம் வெறி கொண்டு
எதை சாதிக்கிறோமோ இல்லையோ...
நம்மையே அழித்து கொல்வோம்...
முஸ்லிம் இனவுணர்வுகளை கொண்டு
காஷ்மீர் பிரதேசத்தால்
இந்தியாவை அழிப்பதாய் சொல்லியே
பாக்கிஸ்தான் அழிகிறது...
தீவிரவாதிகளிடம் இருந்து
இன்னொரு சுதந்திரம் வாங்க
பாகிஸ்தானியர்கள்
போராடித்தான் ஆக வேண்டும்...
தமிழ் உணர்வுகளை கொண்டே
இலங்கை அழிகிறது....
சிங்களனும், தமிழனும்
அடித்துகொண்டால்
வேற்று தேசத்தின்
அடிமைகளாய் மாறி
இன்னொரு சுதந்திரத்திற்காய்
அலையத்தான் போகிறார்கள்?...
இன்று
நாம் இந்தியர்களோ இல்லையோ
நாம் சகோதரர்கள்...
பிரிந்த பின்
நமக்கு நாமே
சண்டை இட்டு கொள்வதற்கா
சுதந்திரம் பெற்றோம்?...
சுதந்திரத்தை
தந்திரமாய் தந்து
நம்மை நாமே
கொன்று கொல்ல
செய்துவிட்டார்கள்...
வரலாறு என்பது
பொழுது போக்கிற்காய் படிப்பதல்ல...
நம்மை
திருத்தி கொள்ளதான் என்பதை
படிக்க மறுக்கிறார்கள்...
நம் ஒற்றுமைக்கெல்லாம்
வானத்தில் இருந்தெல்லாம்
கடவுள் குதிக்க முடியாது
மடையர்களா!...
மரணத்திற்கு பின்னால்...
மரணத்திற்கு பின்னால்...
நாம் யார்?...
எங்கே போகிறோம்?...
சொர்க்கமா?
நரகமா?..
சென்று வந்தவர்கள் யாராவது
இருந்தால்
தெளிவு படுத்தி கொள்ளலாம்...
அப்படி யாரும் இல்லை...
உயிர்,ஆத்மா...
அப்படி என்றால் என்ன?...
சரியானதை சொல்ல
எந்த மனிதனும் பிறக்க வில்லை...
பிறக்க போவதும் இல்லை...
எத்தனையோ நம்பிக்கைகள்...
எத்தனையோ மதங்கள்...
எத்தனையோ கடவுள்கள்...
நாம் படைத்தாலும்...
"உயிர் போகும்"
"உடல் அழிந்து போகும்...
ஆத்மா அழியாது"
"மீண்டும்
வேறு உடலில்
ஆத்மாஜெனிக்கும்"...என்கிறோம்...
உலகில் முதன் முதலில்
எத்தனை மனித உயிர்கள் இருந்தன?...
உலகின் அன்றைய
மக்கள் தொகை என்ன?..
உலகின் இப்போதைய
மக்கள் தொகை என்ன?...
எத்தனை ஆத்மாக்கள் இருந்தன?..
இத்தனை ஆத்மாகளும்
எங்கிருந்து வருகின்றன?..
எங்கே போகின்றன?....
மனிதர்கள் குட்டி போடுகிறோம்?...
ஆத்மாக்களும் குட்டி போடுகின்றனவா?..
கேள்வி சரியா?...
பதில் யாருக்கும் தெரியவில்லையா?..
கடவுள் நம்பிக்கையை
அழிக்க கேட்கப்படும்
கேள்வி இல்லை...
நம் மூட நம்பிக்கையை
ஒழிக்கும் கேள்வி?!...
எத்தனை நாள் தான்
நம்மையே
நாம்
ஏமாற்றி
கொள்ள போகிறோமோ?...
இருக்கட்டும்...
எல்லாவற்றிற்கும்
நாம் சொல்லும்
அதே பதில்
"நம்பிக்கை தான்
வாழ்க்கை "என்று
இதற்கும் சொல்லி
தப்பித்து கொள்வோம்
மரணம் வரை...
நாம் யார்?...
எங்கே போகிறோம்?...
சொர்க்கமா?
நரகமா?..
சென்று வந்தவர்கள் யாராவது
இருந்தால்
தெளிவு படுத்தி கொள்ளலாம்...
அப்படி யாரும் இல்லை...
உயிர்,ஆத்மா...
அப்படி என்றால் என்ன?...
சரியானதை சொல்ல
எந்த மனிதனும் பிறக்க வில்லை...
பிறக்க போவதும் இல்லை...
எத்தனையோ நம்பிக்கைகள்...
எத்தனையோ மதங்கள்...
எத்தனையோ கடவுள்கள்...
நாம் படைத்தாலும்...
"உயிர் போகும்"
"உடல் அழிந்து போகும்...
ஆத்மா அழியாது"
"மீண்டும்
வேறு உடலில்
ஆத்மாஜெனிக்கும்"...என்கிறோம்...
உலகில் முதன் முதலில்
எத்தனை மனித உயிர்கள் இருந்தன?...
உலகின் அன்றைய
மக்கள் தொகை என்ன?..
உலகின் இப்போதைய
மக்கள் தொகை என்ன?...
எத்தனை ஆத்மாக்கள் இருந்தன?..
இத்தனை ஆத்மாகளும்
எங்கிருந்து வருகின்றன?..
எங்கே போகின்றன?....
மனிதர்கள் குட்டி போடுகிறோம்?...
ஆத்மாக்களும் குட்டி போடுகின்றனவா?..
கேள்வி சரியா?...
பதில் யாருக்கும் தெரியவில்லையா?..
கடவுள் நம்பிக்கையை
அழிக்க கேட்கப்படும்
கேள்வி இல்லை...
நம் மூட நம்பிக்கையை
ஒழிக்கும் கேள்வி?!...
எத்தனை நாள் தான்
நம்மையே
நாம்
ஏமாற்றி
கொள்ள போகிறோமோ?...
இருக்கட்டும்...
எல்லாவற்றிற்கும்
நாம் சொல்லும்
அதே பதில்
"நம்பிக்கை தான்
வாழ்க்கை "என்று
இதற்கும் சொல்லி
தப்பித்து கொள்வோம்
மரணம் வரை...
நாம இருக்கமே....
இந்த பேரண்டத்தில்
சுற்றும்
பல கோடி நட்சத்திரங்களில்
ஒரு மூலையில்
நாம் பிறக்கிறோம்
மடிந்து போகிறோம்...
நாம்
பிரித்து போட்டு இருக்கும்
இந்த பூமியில்
பலநாடுகளாய்
நமக்குள்
பிரித்து கொள்கிறோம்...
பூமியில் இருக்கும்
மனித இனத்தில்
நிறத்தில்
இனத்தில்
மொழியில்
இந்தியன்...
அமெரிக்கன்...
மலேசியன்...
ஸ்ரீலங்கன்..
இப்படி சொல்லி கொண்டு
நம் தேசம்...
தேச பற்று...
மண்ணின் மைந்தர்கள் என்று
சொல்லுவதுமாய் இருக்கிறோம்.....
உலகம்...நாம்
அதில் வசிக்கும்
மனித உயிரினம்
என்றால்
நாம் ஒத்து கொள்ளுவதில்லை....
உலகம் பொதுவானது என்று
சொல்பவர்களை...
"இனப்பற்று இல்லாத துரோகியே"
"தேசபற்று இல்லா குடிமகனே" என்று
வெறுப்பாய்
ஒதுக்குகிறோம்...
இப்போது
சொல்லும் எதுவும்
ஏற்று கொள்ள போவதில்லை...
வேற்று கிரகவாசிகளால்
ஒரு நாள்
நாம் தாக்கபடும் போது தான்
நாம் ஒன்று சேர்ந்து
ஒற்றுமையாய்
சொல்லுவோம்...
"நாம்
பூமியின் சொந்தக்காரர்கள்...
நமக்குள் பேதம் வேண்டாம்"...
"நம்மை அழிக்க நினைக்கும்
வேற்றுகிரகவாசியை
அழிக்கவேண்டும்
ஒன்று சேருங்கள்"...
"நாம் அனைவரும்
பூமியில் வாழும்
மனிதர்கள்...
சகோதரர்கள்"...
"ஒன்றுபடுவோம்...
வெற்றி பெறுவோம்"...
என்றெல்லாம் பேசுவோம்...
ஆனால்
அதுவரை
மண்ணுக்காக போராடுவோம்....
மனிதனை மனிதன்
அடித்து கொள்வோம்...
அடிமை கொள்வோம்...
நாம் இப்படி தானே...
தனக்கென்று
பாதிப்பு வந்தால் தானே
"ஒற்றுமை ஓங்குக"என்று
குரல் கொடுப்போம்...
குரல் கொடுக்க சொல்லுவோம்....
நம்ம இருக்கோமே....
சொந்த மண்ணில்
மக்களுக்காய்
வாழும் மனிதர்களை
சொந்த தலைவர்களை
காட்டி கொடுத்து
கொன்றவர்கள் தானே
நாம்...
நமக்கெப்படி புரியும்?....
புரியாத விலங்குகளுக்கு தான்
சொல்லி தர வேண்டும்...
புரிந்தும் தெரிந்தும்
தவறு செய்யும்
நமக்கு யார் சொல்வது?...
"நாம்
மானிட அற்பப்பதர்கள் "என்பதை...
சுற்றும்
பல கோடி நட்சத்திரங்களில்
ஒரு மூலையில்
நாம் பிறக்கிறோம்
மடிந்து போகிறோம்...
நாம்
பிரித்து போட்டு இருக்கும்
இந்த பூமியில்
பலநாடுகளாய்
நமக்குள்
பிரித்து கொள்கிறோம்...
பூமியில் இருக்கும்
மனித இனத்தில்
நிறத்தில்
இனத்தில்
மொழியில்
இந்தியன்...
அமெரிக்கன்...
மலேசியன்...
ஸ்ரீலங்கன்..
இப்படி சொல்லி கொண்டு
நம் தேசம்...
தேச பற்று...
மண்ணின் மைந்தர்கள் என்று
சொல்லுவதுமாய் இருக்கிறோம்.....
உலகம்...நாம்
அதில் வசிக்கும்
மனித உயிரினம்
என்றால்
நாம் ஒத்து கொள்ளுவதில்லை....
உலகம் பொதுவானது என்று
சொல்பவர்களை...
"இனப்பற்று இல்லாத துரோகியே"
"தேசபற்று இல்லா குடிமகனே" என்று
வெறுப்பாய்
ஒதுக்குகிறோம்...
இப்போது
சொல்லும் எதுவும்
ஏற்று கொள்ள போவதில்லை...
வேற்று கிரகவாசிகளால்
ஒரு நாள்
நாம் தாக்கபடும் போது தான்
நாம் ஒன்று சேர்ந்து
ஒற்றுமையாய்
சொல்லுவோம்...
"நாம்
பூமியின் சொந்தக்காரர்கள்...
நமக்குள் பேதம் வேண்டாம்"...
"நம்மை அழிக்க நினைக்கும்
வேற்றுகிரகவாசியை
அழிக்கவேண்டும்
ஒன்று சேருங்கள்"...
"நாம் அனைவரும்
பூமியில் வாழும்
மனிதர்கள்...
சகோதரர்கள்"...
"ஒன்றுபடுவோம்...
வெற்றி பெறுவோம்"...
என்றெல்லாம் பேசுவோம்...
ஆனால்
அதுவரை
மண்ணுக்காக போராடுவோம்....
மனிதனை மனிதன்
அடித்து கொள்வோம்...
அடிமை கொள்வோம்...
நாம் இப்படி தானே...
தனக்கென்று
பாதிப்பு வந்தால் தானே
"ஒற்றுமை ஓங்குக"என்று
குரல் கொடுப்போம்...
குரல் கொடுக்க சொல்லுவோம்....
நம்ம இருக்கோமே....
சொந்த மண்ணில்
மக்களுக்காய்
வாழும் மனிதர்களை
சொந்த தலைவர்களை
காட்டி கொடுத்து
கொன்றவர்கள் தானே
நாம்...
நமக்கெப்படி புரியும்?....
புரியாத விலங்குகளுக்கு தான்
சொல்லி தர வேண்டும்...
புரிந்தும் தெரிந்தும்
தவறு செய்யும்
நமக்கு யார் சொல்வது?...
"நாம்
மானிட அற்பப்பதர்கள் "என்பதை...
புதன், 29 செப்டம்பர், 2010
உன்னால்....
அழகான அவஸ்தைகள்...
எனக்கே
என்னை
மீட்டு கொடுத்தாய்....
நானும் கூட
தடுமாறுகிறேன்...
கொஞ்சம் வெட்கமாய்
வெட்கத்தில்...
அத்தனையும்
அழகாய் ஏன்?...
வெட்ட வெளியில்
நான் நடக்கிறேன்
இங்கும் அங்குமாய்...
இந்த வாடைகாற்று
என் மேல் உரசுகிறது ...
உனக்கும் அனுப்பி வைக்கிறேன்...
நான் சுகபடுவதை விட
நீ சுகப்பட
நான் ஏன் ஏங்குகிறேன்?!...
நானாய் வாழ
ஆசை கொள்கிறேன்...
நீ மட்டும் ஏன்?
ரெம்ப காதலாய்...
ஒன்று சொல்லவா?...
ஆம்
எனக்கும் வெட்கம்
உன்னால்...
இந்த இரவெல்லாம் நீ...
இனி வரும் இரவெல்லாம் நீ...
நீயே சொல்
எது சுகம் எனக்கு?!...
மெல்லியதாய் நாட்கள் ...
மெலிதாய்
வெகுவாய்...
ரிதமாய்...
ஏன்?
பல நாட்களாய்...
இல்லை
இல்லை...
இந்த சில நொடிகளில்
ஏன்?
மெல்லிசையாய்....
எனக்கே
என்னை
மீட்டு கொடுத்தாய்....
நானும் கூட
தடுமாறுகிறேன்...
கொஞ்சம் வெட்கமாய்
வெட்கத்தில்...
அத்தனையும்
அழகாய் ஏன்?...
வெட்ட வெளியில்
நான் நடக்கிறேன்
இங்கும் அங்குமாய்...
இந்த வாடைகாற்று
என் மேல் உரசுகிறது ...
உனக்கும் அனுப்பி வைக்கிறேன்...
நான் சுகபடுவதை விட
நீ சுகப்பட
நான் ஏன் ஏங்குகிறேன்?!...
நானாய் வாழ
ஆசை கொள்கிறேன்...
நீ மட்டும் ஏன்?
ரெம்ப காதலாய்...
ஒன்று சொல்லவா?...
ஆம்
எனக்கும் வெட்கம்
உன்னால்...
இந்த இரவெல்லாம் நீ...
இனி வரும் இரவெல்லாம் நீ...
நீயே சொல்
எது சுகம் எனக்கு?!...
மெல்லியதாய் நாட்கள் ...
மெலிதாய்
வெகுவாய்...
ரிதமாய்...
ஏன்?
பல நாட்களாய்...
இல்லை
இல்லை...
இந்த சில நொடிகளில்
ஏன்?
மெல்லிசையாய்....
நான் யார்?..
நான் யார் என்றேன்...
நீயா என்றேன்?...
நீ தானா என்றேன்...
நீ தான் என்றேன்...
இத்தனை
அருகில் இருந்தது
நீயா?...
என்னுள்
இடைவெளி தந்த
காதல் நீயா?...
வாழ்க்கை புதிராய்
இருக்கிறதென்றார்கள்...
அப்படியா என்றேன்..
இன்று
புதிராய் இருக்கிறது
நானே நானா?...
வானம் ஏதோ
தூரமாய்
இருக்கிறதென்றார்கள்..
நான்
இப்போது வானத்தில் பறக்கிறேன்...
இது ஒன்றும்
தூரமாய் தெரிய வில்லை...
ஆஹா..
நட்சத்திரங்கள்
ஏதோ நினைவு படுத்துகிறது...
ஆமாம்
நீ யார்?...
.
நீயா என்றேன்?...
நீ தானா என்றேன்...
நீ தான் என்றேன்...
இத்தனை
அருகில் இருந்தது
நீயா?...
என்னுள்
இடைவெளி தந்த
காதல் நீயா?...
வாழ்க்கை புதிராய்
இருக்கிறதென்றார்கள்...
அப்படியா என்றேன்..
இன்று
புதிராய் இருக்கிறது
நானே நானா?...
வானம் ஏதோ
தூரமாய்
இருக்கிறதென்றார்கள்..
நான்
இப்போது வானத்தில் பறக்கிறேன்...
இது ஒன்றும்
தூரமாய் தெரிய வில்லை...
ஆஹா..
நட்சத்திரங்கள்
ஏதோ நினைவு படுத்துகிறது...
ஆமாம்
நீ யார்?...
.
காதல்
என்
கடந்த கால
கால்தடங்களை கண்டுபிடித்து
பின் தொடர்ந்தேன் ..
உன்னில்
போய் முடிவதேனடி...
காதல்
எதையும்
செய்யும் என்று கேட்டேன்?...
நீ
அதற்கும் மேலே
அத்தனையும்
செய்தாய் ஏனடி?......
மவுனமாய்
நகர்கிறேன்...
என்னோடு பேசுபவர்களிடம்
பதில் சொல்லாமல் உளறியபடி...
நானாய் வெட்கம் கொள்கிறேன்...
நீ அருகிலும் தொலைவிலும்
இல்லாத பொழுதுகளில் கூட...
சுகம்...
சுகமாய்...
உன் சுகம்
என்ன என்று தெரியாமலே!...
எனக்கு காதல் பிடிக்கும்...
எனக்குள் காதல் வருமா?...
என்னையே
கேட்டு கொண்டிருந்தேன்
இத்தனை நாள்...
ஏன் உன்னிடம்
இத்தனை நாள் கேட்கவில்லை?....
கடந்த கால
கால்தடங்களை கண்டுபிடித்து
பின் தொடர்ந்தேன் ..
உன்னில்
போய் முடிவதேனடி...
காதல்
எதையும்
செய்யும் என்று கேட்டேன்?...
நீ
அதற்கும் மேலே
அத்தனையும்
செய்தாய் ஏனடி?......
மவுனமாய்
நகர்கிறேன்...
என்னோடு பேசுபவர்களிடம்
பதில் சொல்லாமல் உளறியபடி...
நானாய் வெட்கம் கொள்கிறேன்...
நீ அருகிலும் தொலைவிலும்
இல்லாத பொழுதுகளில் கூட...
சுகம்...
சுகமாய்...
உன் சுகம்
என்ன என்று தெரியாமலே!...
எனக்கு காதல் பிடிக்கும்...
எனக்குள் காதல் வருமா?...
என்னையே
கேட்டு கொண்டிருந்தேன்
இத்தனை நாள்...
ஏன் உன்னிடம்
இத்தனை நாள் கேட்கவில்லை?....
வெள்ளி, 24 செப்டம்பர், 2010
21st Century . . .
|
நிலைகள் கடந்தது...
காதல்
விட்டு கொடுத்தலில் மட்டும்
வந்து விடுவதில்லை....
நமக்குள் இருக்கும் அன்பின்
வெளிப்பாடு தான் காதல்...
காதல்
கற்காலம் முதல்
எத்தனையோ காதலர்களை
சந்தித்து வருகிறது...
இந்த மண்
எத்தனையோ
காதல் கண்டிருக்கிறது?...
"காதல் என்பது
பிச்சை இல்லை...
யாசித்து பெற்று கொள்வதற்கு
ஒருவருக்கு மட்டும்
தன்னையே கொடுக்கும் தானம்"...
உண்மையான
காதல் பயப்படுவதில்லை...
உண்மையான காதல்
மலர்ந்து விட்டால்
மறைத்து மூட முடியாது...
நேசித்தவர்களிடம்
உடனே
வெளிப்படுத்தி விடும்...
தெய்வீக காதல் என்பது...
நேசிக்க தொடங்கியதிலிருந்து
ஒன்றாய்
உயிர் பிரியும் வரை
நிமிட நிமிடமாய்
காதலிக்கும்
அற்புதமான அதிசயம்...
காதல் வயப்படாத
மனிதர்கள் இருக்க முடியாது...
காதல்
பல்வேறு நிலைகள்
தாண்டி இருக்கிறது...
விட்டு கொடுத்தலில் மட்டும்
வந்து விடுவதில்லை....
நமக்குள் இருக்கும் அன்பின்
வெளிப்பாடு தான் காதல்...
காதல்
கற்காலம் முதல்
எத்தனையோ காதலர்களை
சந்தித்து வருகிறது...
இந்த மண்
எத்தனையோ
காதல் கண்டிருக்கிறது?...
"காதல் என்பது
பிச்சை இல்லை...
யாசித்து பெற்று கொள்வதற்கு
ஒருவருக்கு மட்டும்
தன்னையே கொடுக்கும் தானம்"...
உண்மையான
காதல் பயப்படுவதில்லை...
உண்மையான காதல்
மலர்ந்து விட்டால்
மறைத்து மூட முடியாது...
நேசித்தவர்களிடம்
உடனே
வெளிப்படுத்தி விடும்...
தெய்வீக காதல் என்பது...
நேசிக்க தொடங்கியதிலிருந்து
ஒன்றாய்
உயிர் பிரியும் வரை
நிமிட நிமிடமாய்
காதலிக்கும்
அற்புதமான அதிசயம்...
காதல் வயப்படாத
மனிதர்கள் இருக்க முடியாது...
காதல்
பல்வேறு நிலைகள்
தாண்டி இருக்கிறது...
தனிநபர் ஒழுக்கம்...
காதல் ,கற்பு இரண்டும்
வெவ்வேறல்ல...
அனைத்தும்
ஒழுக்கத்தை மையபடுத்துவதே....
ஒருவனுக்கு
ஒருத்தி என்ற கொள்கையை
உருவாக்குவதே காதல்...
நம்மால்
கற்பை
கடைபிடிக்க முடியவில்லை என்பதற்காக
கற்பு நெறியை பற்றி
தவறான கருத்தை
வகுக்ககூடாது...
ஏளனபடுத்தகூடாது...
கற்பு நெறி என்பது
தனி நபர் ஒழுக்கம்...
எப்போதும்
ஒழுக்கத்தில் கவனமாய் இருங்கள்...
அது
நம் வாழ்க்கையை
உருவாக்கும்...
"உயர்ந்தோர் பத்தினியை சிறப்பிப்பர்"...
கற்பு
"பெண்ணை அடிமை படுத்த
பயன்படுத்தப்படும் ஆயுதம் "என்று
பெண்களே
இழிவு படுத்தி கொள்ள வேண்டிய
அவசியம் இல்ல...
கற்பு ஆண்,
பெண்
இருவரின்
தனி நபர் ஒழுக்கமே....
வெவ்வேறல்ல...
அனைத்தும்
ஒழுக்கத்தை மையபடுத்துவதே....
ஒருவனுக்கு
ஒருத்தி என்ற கொள்கையை
உருவாக்குவதே காதல்...
நம்மால்
கற்பை
கடைபிடிக்க முடியவில்லை என்பதற்காக
கற்பு நெறியை பற்றி
தவறான கருத்தை
வகுக்ககூடாது...
ஏளனபடுத்தகூடாது...
கற்பு நெறி என்பது
தனி நபர் ஒழுக்கம்...
எப்போதும்
ஒழுக்கத்தில் கவனமாய் இருங்கள்...
அது
நம் வாழ்க்கையை
உருவாக்கும்...
"உயர்ந்தோர் பத்தினியை சிறப்பிப்பர்"...
கற்பு
"பெண்ணை அடிமை படுத்த
பயன்படுத்தப்படும் ஆயுதம் "என்று
பெண்களே
இழிவு படுத்தி கொள்ள வேண்டிய
அவசியம் இல்ல...
கற்பு ஆண்,
பெண்
இருவரின்
தனி நபர் ஒழுக்கமே....
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)
