என்னைப் பற்றி

எனது படம்
கனவுகளை விட நிஜங்களில் வாழ ஆசை...

புதன், 25 ஆகஸ்ட், 2010

நீ மறுத்த போதும்...

உன்னையும்
அறியாமல்
என்னை நீ
காதலித்து கொண்டிருக்கிறாய்....
தொட்டாசிணிங்கிக்கு தெரியாது
தான் வெட்கப்பட்டு கொண்டிருப்பது?!!!....

மழை
நீ
என்னுள்
வர போகிறாய் என்றே இருந்தேன்...
இடியுடன் வந்தாய்...
இன்று
ஈரமான கண்களுடன்
நான்....

கடவுளே நீ என்னை...
படித்ததிலிருந்து
உனக்கு எவ்வளவு கஷ்டம்?......
நானும் விடாமல்
எதாவது கேட்டு கொண்டே  இருக்கிறேன்
நீ மறுத்த போதும்....

கருத்துகள் இல்லை: