என்னைப் பற்றி

எனது படம்
கனவுகளை விட நிஜங்களில் வாழ ஆசை...

வெள்ளி, 30 ஜூலை, 2010

ஒரு வித மன நோயாளிகள்......

நான் எதையும்
மனதில் வைத்து கொள்ள மாட்டேன்......
மனதில் பட்டதை சொல்லி விடுகிறேன்.......
இது தவறா?என்று கேட்பவர்கள்...

தனக்கு
தன் விருப்பபடி நடக்காத போது மட்டும்
நான் யாருக்கு
என்ன கெடுதல் செய்தேன்?...
யார் வாழ்கைய கெடுத்தேன் ?
எனக்கு மட்டும் ஏன்?....
இப்படி எல்லாம்
தன்னை வெகுளியாகவும்..........

என் முன்னால் தவறு நடந்தால்
என்னால் தாங்க முடிவதில்லை.....
எனக்கு கோபம் வந்தால்
நான் என்ன செய்வேன் என்று எனக்கே தெரியாது.....
என்று சொல்லி
தன்னை போராளியாகவும்
சொல்லி கொள்பவர்கள்
அதிகமாய் பெருகி விட்டார்கள்....

சுயநலவாதிகளின் வாதம்
யாரையும்
காப்பாற்றுவதுமில்லை....
யாரையும்
அழிப்பதும் இல்லை....

இவர்கள் மனதால் பக்குவம் அடையாதவர்கள்....
ஒரு வித மன நோயாளிகள்....

கருத்துகள் இல்லை: