என்னைப் பற்றி

எனது படம்
கனவுகளை விட நிஜங்களில் வாழ ஆசை...

வெள்ளி, 23 ஜூலை, 2010

பணம்

மனிதர்கள்
இன்று
எதற்கும் தயாராகி விட்டார்கள்....
வாழ்க்கை முடிவதற்குள்
தன்னால் முடிந்த வரை
ஆசைகள் அனைத்தையும்
அடைந்து விட துடிக்கிறார்கள் ...
இறப்பிற்கு பின் ஒரு நரகம்
உண்டு என்றாலும்
இருக்கட்டும்....
இன்றைய இன்பம் போதும் என்கிறார்கள் ...
இங்கு
தவறு ....
தெரிந்தே செய்கிறார்கள்....
எதற்கும்
தயக்கப்படுவதும் இல்லை....
வெட்கப்படுவதும் இல்லை....
பணம்
எத்தனையோ பேரழிவுகளுக்கு
காரணமாக
அமைந்திருக்கலாம்...
ஆனால்
இன்று
மனித இனத்தையே
அழித்து கொண்டிருக்கிறது...
மனிதன்
கை கூப்பி வணங்குவதும்
கை விரித்து
இறைவனை
தொழுவது கூட
சுயநலத்துகாய் போய்விட்டது.....
பூமி பிளந்து
பணம் கொட்டாத
என்று
வாய் பிளந்து
கிடக்கும்
மனிதர்கள் ஏராளம்...

கருத்துகள் இல்லை: