என்னைப் பற்றி

எனது படம்
கனவுகளை விட நிஜங்களில் வாழ ஆசை...

வியாழன், 22 ஜூலை, 2010

பூமி

பூமியில்
எத்தனையோ கோடான கோடி உயிரினங்கள்....
அத்தனையும் அன்றாடம்
அதன் செயல்களை செய்து கொண்டு இருக்கின்றன...
உலகை திருத்தும்
அவதாரமாய்  காட்டி கொள்ளும்
ஆறறிவு ஆணவம் கொண்ட  மனிதன்
இயற்கையை வெல்ல முயல்கிறான்.....
தன் உயிரையே காப்பற்றி கொள்ள முடியாத
மனிதன்
பல நூற்றண்டுகளாக  இயற்கையிடம்
தோற்று போகிறான் ....
தன்னை கடவுள் என்று பிரகடனப்படுத்தி கொண்டவனும்
இன்று இல்லை....
தன்னை வெகுளி என்று சொன்னவனும்
இன்று இல்லை ...
இயற்கையை உடைத்து
இயற்கையை  வென்றால்
விரைவில்
வெற்று உலகத்தை தான் மனிதன்
வேடிக்கை பார்க்க வேண்டும்......

கருத்துகள் இல்லை: