என்னைப் பற்றி

எனது படம்
கனவுகளை விட நிஜங்களில் வாழ ஆசை...

வெள்ளி, 30 ஜூலை, 2010

நானும் சாராசரி மனிதன் தான்.........

நான்
சமூக சிந்தனையாளனாக
என்னை நினைத்ததுண்டு...........
எனக்கே வெட்கமாய் இருக்கிறது........
அந்த கொட்டும் மழையில்
கை இழந்த மனிதன்
தூக்கி விட யாரும் இன்றி
தவித்ததை
பார்த்தபின்னும்.........
கல் நெஞ்சகாரர்கள்
வேடிக்கை பார்க்கிறார்களே என்று
சமூகத்தை
எப்போதும் சாடும்
நான் கூட
சுயநலவாதியாக
கை தூக்கி விட மனமின்றி
கடந்து வந்த போதே
என்
முக திரை கிழிந்து
எனக்கே என்னை புரிந்தது
நானும்
சாராசரி மனிதன் தான் என்று ...............

கருத்துகள் இல்லை: