என்னைப் பற்றி

எனது படம்
கனவுகளை விட நிஜங்களில் வாழ ஆசை...

வெள்ளி, 30 ஜூலை, 2010

பெண்ணீயம்

ஆண்களை சார்ந்தும்
ஆண்களுக்கு
அடிமை பட்டும் கிடந்த
பெண்கள்
இன்று அதிலிருந்து
விடுபட்டு நிமிர்ந்து நிற்கிறோம்....
பெண் கையில்
பணம் மட்டும் இருந்தால் போதும்
எதையும் சாதிக்கலாம் என்ற பிரச்சாரம் ஓங்கி நிற்கிறது...
கல்வியும்
பொருளாதாரமும் பெற்று
ஆணின் அடிமை விலங்கை உடைத்தோம்....
ஆனாலும் ஆணவத்தால்
குடும்பம் தொலைத்து
கதறி அழுகிறோம்...
பணம் கொண்டு
பாசம் தேடுகிறோம்...
காதல் தேடி கணவனை தொலைத்து
கண்டவனிடம்
கற்பழிக்கபடுகிறோம்
உள்ளும் ,புறமும்.....
ஆணை சார்ந்து ஒரு பெண்ணும்
பெண்ணை சார்ந்து ஒரு ஆணும் கொண்ட
வாழ்கையை
வாழ்ந்து தான் ஆக வேண்டும்.....
தனி நபர் ஒழுக்கம்
சமூகத்திடம்
தேட முடியாது....
நம்மில்
தொடங்க வேண்டும்....
ஆணை அரவணைத்து போவதில் தான்
பெண்மை இருக்கிறது....
பெண்ணீயம்
கண்ணியமான
இல்லறத்தில் தான் உள்ளது....

கருத்துகள் இல்லை: