என்னைப் பற்றி

எனது படம்
கனவுகளை விட நிஜங்களில் வாழ ஆசை...

செவ்வாய், 27 ஜூலை, 2010

வலிக்கிறது....

என்னை
ஏன் யாரும்
புரிந்து கொள்வதில்லை?.....
நான் நேர்மையை கடைபிடிக்கிறேன்.....
சொந்த வேலை கூட தவிர்த்து
என் வேலையில் உண்மையாய்
உழைக்கிறேன்....
எனக்கு இதற்காக
பரிசு, பணமும் தரவேண்டாம்....
பெருமை படுத்தவும் வேண்டாம்....
ஆனால்....
காயப்படுத்துகிறார்கள்....
கண்கலங்க வைக்கிறார்கள்....
உண்மையாய் இருக்கும்
நாம் இப்படி
சொல்லிக்கொண்டே இருக்கிறோம்....
யாரும்
கேட்க தயாராய் இல்லை....
நீ இல்லை என்றால்
எதுவும் நடக்காதா?என்று
நம் உழைப்பை
தற்பெருமை
என்று கொட்சை படுத்தும் போதே
வலிக்கிறது....
இவர்களுக்காகவா ?
இவர்களுக்கு போய் ?
இனி மேலும்
இவர்களுக்காக ?
ஏதும் செய்ய மனமில்லை....
என்ன சொல்ல?...
பொய்
சந்தோசமாகவும் மகிழ்ச்சியாகவும்
வாழ்ந்து கொண்டு இருக்கிறதென்றால் .........
அங்கே.....
உண்மை இறந்திருக்க வேண்டும்...
அல்லது
கொல்லபட்டிருக்க வேண்டும்.....
என்னை
என்னால் கூட
தேற்றமுடியவில்லை....
என்ன
உலகம்?
என்ன
மனிதர்கள்......

கருத்துகள் இல்லை: