என்னைப் பற்றி

எனது படம்
கனவுகளை விட நிஜங்களில் வாழ ஆசை...

வெள்ளி, 30 ஜூலை, 2010

பிரச்சனைகள் ...

மனிதர்களுக்கு
பிரச்சனைகள் அதிகம்....
ஆனாலும்
நாம் பல நேரங்களில்
அதை சமாளித்து விடுகிறோம்
சில நேரங்களில்
நாம் சாய்ந்து போகிறோம்....

எத்தனை சமாளிப்புகள்
செய்தும்
முடியாமல் வெடிக்கிறோம்....
கோபமாய் ....
கோழையாய்....

"பொறுமையாய் இருங்கள்"
என்று போதனை சொல்பவர்களுக்கு
நம் நிலை புரியாதோ என்று
சீறி விடுகிறோம்...

உண்மை....

நம் வாழ்கையில்
பெரிதாய் ஒன்றும்
நடந்து விடாது
அதிக பட்சம் இறப்பு....

நிதானம்...
நாம் நிலைகுலையும் போது
செய்ய வேண்டிய
தியானம்....

இதற்காகவா ?
இந்த
சின்ன விசயதிற்காகவா?...
இப்படி நடந்து கொண்டோம்
என்பது புரியும்....

உங்களை நீங்களே
திட்டி எழுதி
மறுநாள்
படித்து பாருங்கள்...
உங்களின்
குறைகள்
உங்களுக்கு புரியும்....

1 கருத்து:

karthikeyan சொன்னது…

thodarattum ungal ilakkiya payanam