என்னைப் பற்றி

எனது படம்
கனவுகளை விட நிஜங்களில் வாழ ஆசை...

வெள்ளி, 23 ஜூலை, 2010

காரியம் சாதிக்க

பொறாமை படுகிறவன் .....
நம்பிக்கை இல்லாதவன்
தவறான வேலையில் ஈடுபடுகிறான் ....
இயலாமை அவனை
எப்படியாவது  வாழ வேண்டும் என்று
இழுத்து  செல்கிறது....
தான் காரியம் சாதிக்க மற்றவர்களை பற்றி
தவறாய் சொல்வதும்
வதந்திகள் பரப்புவதுமாய் மாறுகிறான்.......
கோழைகள்
இப்படித்தான்
முகஸ்துதியும்
முதுகில் குத்துபவர்களாகவும் இருப்பார்கள்....
புகழுக்கும்
"தான் உயர்ந்தவன்...
தன்னை எல்லோரும் மதிக்க வேண்டும்"  என்ற
ஆணவம் கொண்டவன்
முகஸ்துதி செய்யும் கோழைகளிடம்
எளிதாய் ஏமாந்து போகிறான்....
"பொறாமை
பழிவாங்கும் குணம் "
கொண்ட மனிதனால்
வாழவும் முடியாது....
அவன் நட்பு
நம்மை
வாழவும் விடாது....

கருத்துகள் இல்லை: