என்னைப் பற்றி

எனது படம்
கனவுகளை விட நிஜங்களில் வாழ ஆசை...

வியாழன், 2 செப்டம்பர், 2010

நம் காதல்....

என் கண்களில்
வியர்க்கும்
உன் நினைவுகளை
கொட்டி தீர்க்காமல்  
இருக்க முடியவில்லை....

உன் கூந்தலில் 
மலரும்
பூக்களுக்காய்
என் கல்லறை மட்டுமல்ல...
அதில் உறங்கும்
என் இதயமும் காத்திருகிறது....

நாம்
சுற்றி திரிந்த இடங்கள்
ஒவ்வொன்றையும்
பார்க்கும் போது
தொலைந்த உன் பாதம்
எங்காவது
தென்படுகிறதா என்று
என் பாதம் 
என்னையே ஏங்கி பார்க்கிறது?!!!...

நோயினால்
நான் படுத்தால்
நோன்பு இருப்பவளே....
என் இறக்கும்தேதி
கேட்டவுடன்
உன் கண்களில் உதிரும்
அந்த கண்ணீரில் தானடி 
கோடானகோடி ஆண்டுகள்
வாழும்
நம் காதல்...

உனக்காக
நான்
நல்ல கவிதைகளை
சேமித்து வைத்திருக்கிறேன்
ஆம்...
அவை
"நீ என்னிடம்
பேசிய வார்த்தைகள்"....

கருத்துகள் இல்லை: